என் மகள் இனி புது வாழ்க்கையை தொடங்குவாள்.. 6 பேரும் இனி நல்ல முறையில்.. நளினியின் தாயார் உருக்கம்!
சென்னை : நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை குறித்துப் பேசியுள்ள நளினியின் தாயார் பத்மா, "புதிதாக ஒரு வாழ்க்கையைத் தொடங்கப்போவதாக என் மகள் நளினி சொன்னாள். என் மகள் நல்ல முறையில் வாழ வேண்டும் என விரும்புகிறேன்" என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்ட நிலையில் நளினி, முருகன் உள்ளிட்டோரும் தங்கள் விடுதலைக்காக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதையடுத்து 30 ஆண்டுகள் சிறையில் இருந்துவரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நளினி கடந்த பல மாதங்களாக பரோலில் தனது தாயாருடன் இருந்து வரும் நிலையில், இந்த விடுதலைச் செய்தி அவரது தாயார் பத்மாவுக்கு மிகுந்த ஆறுதலைக் கொடுத்துள்ளது.

6 பேரும் விடுதலை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் கடந்த மே 18ஆம் தேதி பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, அவரது கணவர் முருகன் உள்ளிட்ட 6 பேரும் தங்களை சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நளினி உட்பட ஆறு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளனர்.

நளினி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நளினி கடந்த 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இவரது கணவர் முருகனும் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தன்னை அருகிலிருந்து கவனித்துக்கொள்ள தன் மகள் நளினியை தற்காலிக விடுப்பில் விடுவிக்க வேண்டும் என்று அவரது தாயார் பத்மா, மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து அவருக்கு பரோல் வழங்கப்பட்டது. நளினிக்கு 10வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டிருந்தது. இதனால், நளினி கடந்த பல மாதங்களாக அவர் தாயாருடனே இருந்தார்.

நளினியின் தாயார்
இந்நிலையில் இன்று நளினி உள்ளிட்ட 6 பேரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட தகவல் நளினியின் தாயார் பத்மாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப் பேசியுள்ள நளினியின் தாய் பத்மா, "எவ்வளவோ சூழல்களில் விரக்தி அடைந்தாலும், சிறு புள்ளி அளவு நம்பிக்கை என் மகள் நளினியிடம் தேங்கி இருந்தது. அந்த நம்பிக்கை இன்று நிஜமாகிவிட்டது. 7 பேரில் ஒரே ஒரு பெண்ணாக துயரங்களை அனுபவித்த நளினி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு நன்றி
நளினியின் விடுதலைக்காக பாடுபட்ட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எடப்பாடி பழனிசாமிக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். அரசியல் தலைவர்களுக்கும், குரல் கொடுத்தவர்களுக்கும் நன்றி. இந்த வழக்கில் விடுதலைக்காக போராடிய அனைத்து வழக்கறிஞர்களுக்கும் கைகூப்பி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

நல்ல முறையில் வாழ வேண்டும்
மேலும், "இவர்களைத்தாண்டி எத்தனையோ மனிதநேயம் படைத்த பலர் எங்களுக்காகப் போராடினர். அவர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். மேலும் விடுதலையாகும் இந்த ஆறு பேரும் அனைவருக்கும் ஒத்துழைப்பு கொடுத்து நல்ல முறையில் இருப்பார்கள் என நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். என் மகளும் நன்றாக படித்துள்ளார், அது அவருக்கு கைகொடுக்கும். புதிதாக ஒரு வாழ்க்கையைத் தொடங்கப்போவதாக என் மகள் சொன்னாள். என் மகள் நல்ல முறையில் வாழ வேண்டும் என விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications