அன்னம்மா பெத்தவளே...ஆட்டுக்குஞ்சொல்லதே...கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் 2
கவிஞர் வைரமுத்துவின் "அன்னம்மா பெத்தவளே"என்ற கவிதைப் பாடல் மே 8 ஞாயிறு அன்று ஒளிபரப்பாகிறது.
சென்னை: கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் பருவம் 2 பாட்டுத்தொடர் ஏப்ரல் 17 முதல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் நான்காவது பாடல் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.

பூப்பெய்திய செய்தி மறைக்கப்படுகிறவரை ஆணாதிக்கச் சமூகத்தால் ஒரு பெண் பாலியல் கைதியாகவே பார்க்கப்படுகிறாள் என்று பொருள் அந்தச் சுதந்திரமில்லாமல் பெண்ணுக்கேது கண்ணியம்? அதைப் பேசாதிருப்பதென்ன பெண்ணியம்? அந்த அவலம் பாடுகிறது
'அன்னம்மா பெத்தவளே' என்று பதிவிட்டுள்ளார் வைரமுத்து.

அன்னம்மா பெத்தவளே!
ஆடுமேய்க்கப் போனவளே!
அந்தி மங்குமுன்னே
ஆடுவந்த மாயமென்ன!
வாய்க்காக் கரையோரம்
வயித்துவலி வந்துடுச்சா!
பயந்து நடுங்கையில
பாவாடை நனஞ்சுச்சா?
பிஞ்சுப் பழுத்திருச்சே
பெருந்துன்பம் வந்திருச்சே
நெல்லறுக்கப் போகயிலே
வெள்ளெருக்கு பூத்திருச்சே
பாவடை சட்டையே
அந்த பரமசிவன் கொடுத்த வரம்!
சக்களத்தி மவளே நான்
தாவணிக்கு என்ன பண்ண!
தாவணி வேணுமின்னா
தாய்மாமன் வரவேணும்!
தாய்மாமன் வரணுமின்னா
ஜாமீனில் வெளி வரவேணும்!
அப்பன் வெறுங்கூடு!
ஆத்தாளோக் கருவாடு!
இந்தவொரு லட்சணத்தில்
ஏண்டியம்மா குத்தவச்ச!
ஆளாகி நின்னவள
ஆடுமேய்க்கச் சொன்னாக்கா......
அப்பன் தடுப்பாக,
அடுத்தவுக முறைப்பாக!
இந்த ராத்திரிக்கு ராத்திரியே,
ரகசியமாத் தலைமுழுகி,
நாளைக்கே ஆடோட்டு!
யாருக்குந் தெரியாது!
ஆடுமேய்க்கப் போகயில
அங்கங்கே நிக்காதே!
அடியே ஒஞ்சங்கதிய......
ஆட்டுக்குஞ்சொல்லாதே! ஆமா!












Click it and Unblock the Notifications