வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - 3 நாட்களுக்கு மழை அடி வெளுக்குமாம்

ஆந்திரா - ஒடிசாவை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரா - ஒடிசாவை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருப்பத்தூரில் 7 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. சோலையாரில் 6 செமீ மழையும் பதிவாகி உள்ளது. மரக்காணம், திருப்போரூர், விழுப்புரம், பரங்கிப்பேட்டை, திருவாலங்காடு, அவலாஞ்சி உள்ளிட்ட பல ஊர்களில் கனமழை பெய்துள்ளது. சென்னையிலும் இரவு நேரத்தில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியது.

New Depression in the Bay of Bengal - Heavy Rainfall for 3 days says met office

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

வானிலை மைய ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேனி, திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 30ஆம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். தேனி திண்டுக்கல் சேலம் திருவண்ணாமலை வேலூர் ராணிப்பேட்டை கடலூர் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். தமிழ்நாட்டில் இதர மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது,'என்று தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி மற்றும் கோவையில் 30ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

31,1ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக, மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+