சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க போறீங்களா?.. மறக்காம இதை கொண்டு போங்க.. இல்ல ரூ.500 தண்டம் கட்டணும்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 11,000-ஐ கடந்து விட்டது. ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் உச்சத்தை தொட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து ஆட்டம் போட்டு திரியும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தினமும் இரவு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு
தினமும் இரவு நேர ஊரடங்கில் அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிப்பட்டுள்ளது. அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்த நிலையில் சென்னை புறநகர் மின்சாரா ரயில்களில் பயணிக்க தெற்கு ரயில்வேயும் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. கீழ்க்கணட கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.

2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்
அதாவது 2 டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் இன்று முதல் பயணிக்க முடியும். புறநகர் ரயிலில் மாஸ்க் அணியாமல் பயணித்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மாஸ்க் அணியாமல் ரயில் நிலையத்தில் சுற்றினாலும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் புறநகர் ரயிலில் செல்பவர்கள் வருகிற 31-ம் தேதி வரை UTS செயலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மாஸ்க் இல்லாதவர்களுக்கு அபராதம்
இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் செல்லும் மின்சார ரயில்கள், சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் ரயில்கள், சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயில்களில் செல்லும் பயணிகள் மாஸ்க் அணிந்தபடியே பயணம் செய்து வருகின்றனர். மாஸ்க் இல்லாமல் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மாதாந்திர சீசன் டிக்கெட் பெற இது அவசியம்
இதேபோல் சென்னை புறநகர் ரயில்களில் பயணிகளுக்கான மாதாந்திர சீசன் டிக்கெட் பெற, கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டிருப்பது அவசியம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. புதிய கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது மிக கடுமையான அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் சிலர் கூறினார்கள்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications