என்.ஐ.ஏ அதிரடி ரெய்டு.. சென்னை, இலங்கை தமிழர் வீட்டில் விடுதலை புலிகள் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல்
சென்னை: தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் கேரளாவில், தேசிய பாதுகாப்பு முகமை (NIA) அதிகாரிகள் 7 இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் , ஹெராயின் போதை பொருள், ஏ.கே 47 துப்பாக்கி மற்றும் குண்டுகளுடன் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து என்.ஐ.ஏ பிரிவு விசாரணை நடத்தி வரும் நிலையில் , அது தொடர்பாக சென்னை , திருவள்ளூர் ,கேரளா உள்ளிட்ட 7 இடங்களில் இன்று காலை முதல், என்.ஏ.ஐ சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை வளசரவாக்கத்தில் சற்குணம் என்ற இலங்கை தமிழர் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடு இலங்கைத் தமிழர் சற்குணம் கடந்த 6 மாதத்திற்கு முன்பு வசித்து வந்த வீடு ஆகும். அவரது வீட்டில், விடுதலை புலிகள் தொடர்பான புத்தகம், செல்போன், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் மீது கேரளா மாநிலம் கொச்சியில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக, இவரின் வீட்டை சோதனை செய்து வருகின்றனர் என தகவல்.
குறிப்பிட்ட இந்த வீடு தாஜ் டவர், முரளி கிருஷ்ணா நகர் வளசரவாக்கம் சென்னை என்ற முகவரியில் உள்ளது. என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தலைமையில் 5 நபர்கள் மற்றும் வளசரவாக்கம் உதவி ஆய்வாளர் மணிமேகலை உதவியுடன் சோதனை செய்து வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கேரளாவில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கும், சென்னை இலங்கை தமிழர் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்களுக்கும் என்ன தொடர்பு என்ற பல கோணங்களில் என்.ஐ.ஏ விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications