திருக்குறளை படித்தால் புரியும்.. காவிக்கும் திருவள்ளுவருக்கும் சம்பந்தமில்லை.. கனிமொழி 'நச்' பதில்!
சென்னை: திருக்குறளுக்கும் காவிக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் திருவள்ளுவருக்கு காவி பூசிய புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து, திருவள்ளுவர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
வடசென்னையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு திமுக சார்பாக பொங்கல் பரிசுகளை கனிமொழி வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கனிமொழி கூறுகையில், பொதுமக்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள சென்னை சங்கமம் - நம்ம ஊர் திருவிழா நிகழ்ச்சிகள் 17 இடங்களில் நடந்து வருகிறது. உணவு திருவிழா மற்றும் கலைத் திருவிழா இரண்டிற்கும் மக்கள் தங்களின் முழு வரவேற்பை அளித்துள்ளார்கள். இதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.

எஸ்பிஐ தேர்வு
தொடர்ந்து, பொங்கல் பண்டிகையன்று எஸ்பிஐ தேர்வு நடத்தப்பட்டது பற்றிய கேள்விக்கு, திமுக சார்பாக எஸ்பிஐ தேர்வு நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசி இருந்தார். தமிழ்நாட்டில் எப்படி பொங்கல் கொண்டாடப்படுகிறதோ, அதேபோல் வடமாநிலங்களிலும் விவசாய அறுவடை திருவிழாக்கள் நடக்கிறது.

தமிழர்களின் உணர்வு
இதனால் பொங்கலன்று மக்களின் உணர்வை மதிக்காமல், எஸ்பிஐ தேர்வை நடத்தியிருப்பது நாட்டின் ஒற்றுமை குழைப்பதாக இருக்கிறது. தமிழர்களின் உணர்வை மத்திய அரசு எப்போதும் உணர்ந்ததில்லை. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களின் உணர்வை ஆளுநர் ஆர்.என்.ரவி உட்பட அனைவரும் புண்படுத்துகிறார்கள் என்று விமர்சித்தார்.

தமிழ்ப் புத்தாண்டு
தொடர்ந்து தை 1ம் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை பற்றிய கேள்விக்கு, தமிழ்ப் புத்தாண்டாக தான் கொண்டாடி வருகிறோம். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்த பின், அதன் பின்னர் தமிழ்ப் புத்தாண்டாகவே கொண்டாடப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

தமிழர்களின் வீரம்
பின்னர், ஆளுநர் ஆர்.என்.ரவி ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்கவிருப்பது பற்றிய கேள்விக்கு, தமிழ்நாட்டின் வீரம், உணர்வு இருக்கக் கூடிய ஜல்லிக்கட்டு போட்டியை காண ஆளுநர் ஆர்.என்.ரவி செல்கிறார். யாராக இருந்தாலும் வரவேற்று நமது கலை மற்றும் பண்பாட்டை சொல்லி தருவோம் என்று தெரிவித்தார்.

திருக்குறளும் காவியும்
தொடர்ந்து, திருவள்ளுவர் காவி உடையில் இருக்கும் புகைப்படத்தை அண்ணாமலை ட்விட்டரில் பகிர்ந்தது பற்றிய கேள்விக்கு, திருக்குறளை படித்தால், அதற்கும் காவிக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று புரிந்து கொள்வார்கள். முதலில் படிக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திருக்குறளுக்கு எழுதிய உரை தெளிவாக இருக்கிறது என்று பதில் அளித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications