நோ இழுபறி.. டெல்லியில் இருந்து அறிவிப்பு வரும்! திமுக - காங். கூட்டணி உறுதி செய்த செல்வப்பெருந்தகை?
சென்னை: சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. காங்கிரஸ் தலைமையிடம் இருந்து அறிக்கை வரும். அதனை சென்னை அண்ணா அறிவாலயத்தில் காண்பித்து தொகுதி பங்கீட்டை நிறைவு செய்வோம் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணியில் முக்கிய கட்சியாக உள்ள காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை கேட்டதால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாகவே நீண்டு கொண்டே சென்றுள்ளது. தொடர்ந்து 4வது முறையாக திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க உள்ளது.

திமுக காங்கிரஸ் கூட்டணி
முதலில் காங்கிரஸ் 41 தொகுதிகளை கேட்டது. ஆனால் திமுக புதிதாக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம், தேமுதிக ஆகிய கட்சிகளுக்கும் கவுரவமான முறையில் இடங்களை ஒதுக்கி கொடுக்க வேண்டி உள்ளதால் இந்த முறை 25 தொகுதி தான் என திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியானது.
ஆனால் காங்கிரஸ் கட்சி இதனை ஏற்க மறுத்து மீண்டும் கிரிஷ் சோடங்கரை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. காங்கிரஸ் கட்சியின் இந்த கோரிக்கையை ஏற்பதற்கு திமுக மறுத்ததால் தொடர்ந்து திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடித்து வந்தது.
தவெகவுடன் போனால் ஜெயிக்க முடியாது
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் நேற்று முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்து தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திமுக 28 + 2 தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் இது குறித்து ப சிதம்பரம் டெல்லி தலைமையிடம் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது திமுக கூட்டணி இந்த முறை வலுவாக இருப்பதோடு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஆனால் தவெகவுடன் போனால் வெற்றி பெற முடியாது என்றும் கூறியதாக தெரிகிறது.
எந்த இழுபறியும் இல்லை..
இதையடுத்து காங்கிரசும் இறங்கி வந்திருக்கிறது. இந்த நிலையில் உறுதியாக 28 + 2 அல்லது 29 + 1 என்று முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. திமுக காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் கையெழுத்தும் போட இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, திமுக காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் எந்த இழுபறியும் இல்லை.. சுமூகமாக சென்று வருகிறது.
காங்கிரஸ் தலைமை அறிக்கை தரும்
தற்போது சென்னை விமான நிலையத்தில் ஆலோசனை நடத்தவில்லை.. நோன்புதான் திறந்தோம்.. எந்த இழுபறியும் இல்லை. டெல்லி காங்கிரஸ் தலைமை முறையான அறிக்கையினை எங்களுக்கு அனுப்பும். அதனை நாங்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்து தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தை நிறைவு செய்வோம். இதற்கு பிறகு உங்களை சந்தித்து எத்தனை தொகுதிகள் என்பதை வெளிப்படையாக அறிவிப்போம்.. கொஞ்சம் காத்திருங்க்ள்..” இவ்வாறு அவர் கூறினார்.
-
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
ஸ்டாலின் 6.. கனிமொழி கையில் எடுத்த மேஜிக்.. தேர்தல் போக்கையே மாற்றும் அந்த 6 வாக்குறுதிகள்? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி -
DMK MANIFESTO: மகளிர் உரிமைத்தொகை டூ முதியோர் பென்ஷன் வரை.. 13 திட்டங்களின் உதவித்தொகைகள் உயர்வு – ஸ்டாலின்












Click it and Unblock the Notifications