உள்ளாட்சி தேர்தலில்.. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியா? கூட்டணியா?.. சீமானின் பதில் இதுதான்!
சென்னை: விடுதலை போராட்ட வீர்ர் தீரன் சின்னமலையின் 216-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் தீரன் சின்னமலையின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்கள்.
இதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்தினார்கள்.

மேகதாது அணை விவகாரம்
இதேபோல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினார். இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த சீமான் கூறியதாவது:- மேகதாது அணை விவகாரத்தில் பா.ஜ.க மக்களை குழப்புகிறது. இங்குள்ள பா.ஜ.க மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் என்று கூறுகிறது.

பா.ஜ.க குழப்பம்
ஆனால் கர்நாடகா பா.ஜ.க மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று பிடிவாதமாக உள்ளது. நாட்டில் அனைவரும் இயற்கை உணவுக்கு திரும்பி உள்ளார்கள் ஆனால் அந்த அளவுக்கு உற்பத்தி பெருக்கம் இல்லை. நாங்கள் இயற்கை வேளாண்மையை கட்டமைக்கிறோம். பொருளாதார கொள்கையை பேசி வருகிறோம். வேளாண்மை அரசுப் பணியாக மாற்றுவோம் என்று ஏற்கனவே கூறியுள்ளோம்.

உள்ளாட்சித் தேர்தல்
எந்த தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். இதில் எந்த மாற்றமும் இல்லை. சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு அதிக வாக்கு சதவீதம் பெற்று தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளோம்.

வாக்கு சதவீதம்
கடந்த காலங்களில் கட்சிகள் தனித்து போட்டியிட்டு பெற்ற வாக்கு சதவீதத்தை விட கூட்டணி வைத்த போது அவர்களுக்கு வாக்கு சதவீதம் குறைந்துள்ளதை நீங்களே பாருங்கள். கடந்த சட்டமன்ற தேர்தலிலும் பெரும்பாலான கட்சிகள் கூட்டணி வைத்ததால் அவர்களின் வாக்கு விழுக்காடு குறைந்து விட்டது. இவ்வாறு சீமான் கூறினார்.

6.5 சதவிகித வாக்குகள்
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால் மற்ற கட்சிகள் வியந்து பார்க்கும் வகையில் 6.5 சதவிகித வாக்குகளைப் பெற்று தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக வந்துள்ளது. அதே வேளையில் கூட்டணி வைத்து களம் கண்ட அ.ம.மு.க- தே.தி.மு.க கட்சிகள், மக்கள் நீதி மய்யம்-சமத்துவ மக்கள் கட்சி-இந்திய ஜனநாயக் கட்சிகள் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications