தமிழ்நாட்டில் சிமெண்ட், செங்கல், ஜல்லி விலை விர்... அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்
ஒரு மூட்டை சிமெண்ட் விலை 520 ரூபாயாக அதிகரித்துள்ளது. எம் சாண்ட் ஒரு யூனிட் ரூ.6,000 ஆகவும் ஒரு அங்குல ஜல்லி 3,900 ரூபாயாகவும் முக்கால் அங்குல ஜல்லி 4,100 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுபடுத்த பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், கட்டுமான பொருட்களின் விலை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஒரு மூட்டை சிமெண்ட் விலை 520 ரூபாயாக அதிகரித்துள்ளது. எம் சாண்ட் ஒரு யூனிட் ரூ.6,000 ஆகவும் ஒரு அங்குல ஜல்லி 3,900 ரூபாயாகவும் முக்கால் அங்குல ஜல்லி 4,100 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் 30 முதல் 40 சதவிகிதம் வரை பொருட்களின் விலை உயர்ந்திருப்பதாக கட்டுமான பொறியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஒரு டன் கட்டுமான ஸ்டீல் கம்பி 68 ஆயிரத்திலிருந்து 75 ஆயிரமாக உயர்ந்துள்ளது. செங்கல் ஒரு லோடு 18 ஆயிரம் ரூபாயிலிருந்து 24 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இப்படி அனைத்து கட்டுமானப் பொருட்களின் விலையும் ஏற்றம் செய்யப்பட்டுள்ளதால் கட்டுமானப் பணிகள் தேக்கம் அடைந்துள்ளது.
இந்த விலை உயர்வினால் தமிழ்நாடு முழுவதும் கட்டுமானப் பணிகளைச் சார்ந்து வாழும் 20 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கட்டுமான பொருட்களின் விலை செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கட்டுமான பொருட்கள் விலை திடீரென உயர்த்தப்பட்டதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இப்படியே லீவு விட்டுகிட்டே இருங்க.. எங்கம்மா என்ன நல்லா வெச்சு செய்து... புலம்பும் சிறுமி வீடியோ!
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கட்டுமான பொருள் பகுக்கப்பட்டு செயற்கை விலையேற்றம் உருவாகியிருப்பதாக மக்கள் நினைக்கின்றனர் என்றும் சிமெண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.