அழாதே பன்னீர்! சென்னை போய் நான் சொன்னதை செய்.. அன்று ஜெயலலிதா சொன்னது என்ன? ஓபிஎஸ் பரபர வாக்குமூலம்
சென்னை: ஜெயலலிதா மரண விசாரணையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் முக்கியமான வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். ஜெயலலிதாவிற்கு எதிராக சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்தது பற்றி ஓ பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Recommended Video
மறைநத முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் விசாரணையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பல பரபரப்பு வாக்குமூலங்களை அளித்து உள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக 6 மணி நேரத்திற்கும் மேலாக ஓ பன்னீர்செல்வம் பல்வேறு விஷயங்களை வாக்குமூலத்தில் தெரிவித்து இருக்கிறார். அதில், ஜெயலலிதாவின் கைரேகை. திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலில் ஜெயலலிதா கைரேகை போட்டது உண்மைதான்.
ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகமில்லை: ஓபிஎஸ் பல்டி! சசிகலா சதித்திட்டம் தீட்டவில்லை என வாக்குமூலம்.

ஜெயலலிதா
மேலும் ஜெயலலிதாவிற்கு எக்மோ கருவி நீக்கப்பட்ட முன்பாக, டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மறைவிற்கு முன்பாக அவரை பார்த்ததாக ஓ பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் எதுவும் இல்லை. தனிப்பட்ட முறையில் நான் சந்தேகம் அடையவில்லை. பொதுமக்களிடயே கருத்து வலுத்ததால்
மட்டுமே நான் அதை பற்றி விசாரிக்க கோரிக்கை விடுத்தேன். அரசுப்பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எவ்வித தகவலையும் என்னிடம் தெரிவிக்கவில்லை.

சசிகலா
சசிகலாவை நான் தனிப்பட்ட முறையில் மதிக்கிறேன். சசிகலா எந்தவிதமான சதித் திட்டமும் தீட்டவில்லை என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். இந்த நிலையில் இரண்டு நாள் விசாரணை சற்று நேரத்திற்கு முன் முடிவடைந்தது. ஆணையத்தின் 120 கேள்விகளுக்கு பதில் அளித்தார் . சசிகலா தரப்பு வழக்கறிஞர் எழுப்பிய 34 கேள்விகளுக்கும் அப்போலோ தரப்பு வழக்கறிஞரின் 11 கேள்விகளுக்கும் ஓ பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.

ஓ பன்னீர்செல்வம்
இந்த விசாரணையில் ஓ பன்னீர்செல்வம் சொத்து குவிப்பு வழக்கு பற்றியும்முக்கிய வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று கர்நாடக நீதிமன்றம் கூறியதும் நான் வருத்தத்தில், துயரத்துடன் கண்ணீர்விட்டு கொண்டு இருந்தேன். மிகுந்த தூரத்தில் நான் இருந்தேன். அப்போது என்னை அழைத்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்ட சொன்னார் ஜெயலலிதா. அவர் சொன்னபடியே நான் எம்எல்ஏக்களை உடனே வரும்படி அழைத்தேன்.

அதிமுக வாக்குமூலம்
சென்னையில் கூட்டம் நடைபெற்றது. தனது பாதுகாவலர் வீரப்பெருமாள் மூலம் நத்தம் விஸ்வநாதனை அழைத்து தனியாக ஜெயலலிதா பேசினார். அதில், ஓ.பன்னீர்செல்வம் தான் அடுத்த முதல்வர். அவரின் பெயரத்தான் முன்மொழிய வேண்டும் என்று கூறிவிட்டார். அவரைதான் எம்எல்ஏக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கூறினார். நான் தீர்ப்பு வந்த சோகத்தில் மிகுந்த துயரத்துடன் அழுது கொண்டிருந்தேன்;

ஜெயலலிதா என்ன சொன்னார்
அப்போது ஜெயலலிதா என்னை சந்திக்க அழைத்தார். நான் அவரை சென்று சந்தித்தேன். அவர் என்னிடம் அழாதே பன்னீர் என்று கூறினார். மேலும் இப்போதுதான் நீ தைரியமாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். சென்னைக்கு உடனே கிளம்பி செல். சென்னைக்கு சென்று நான் சொன்னபடி வேலைகளை செய் என்று கூறினார் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications