மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஆய்வு நடத்த உத்தரவிட்ட அதிகாரி அதிரடி டிரான்ஸ்பர்!
சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஆய்வு நடத்திய, வேலூர் மண்டல, இந்து சமய அறநிலையத்துறை, இணை ஆணையர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது.
மேல்மருவத்தூரில் புகழ்பெற்ற ஆதிபராசக்தி கோவில் உள்ளது. வருடம் முழுக்க இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், ஆதிபராசக்தி கோயிலை கொண்டுவருவது குறித்து, ஆய்வு செய்ய வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, காஞ்சிபுரம் அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி தலைமையில் 4 பேர் குழு அமைக்கப்பட்டு மேல்மருவத்தூர் கோவிலில் ஆய்வு செய்ய சென்றனர். ஆனால், இதற்கு கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.
அதிகாரிகளுக்கும், கோவில் நிர்வாகத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையில் புகார் அளிக்கும் நிலை வரை மோதல் சென்றது. கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்று, அறநிலையத்துறை, உதவி ஆணையர் ரமணி மேல்மருவத்தூர் போலீசில் புகார் செய்தார்.
மேல்மருவத்தூர் கோவில் ஸ்தாபகரான பங்காரு அடிகளாருக்கு, மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம், மத்திய அரசால், பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக அறநிலையத்துறை அதிகாரிகள், சோதனைக்காக, கோயிலுக்குள் சென்றது பாஜக மற்றும் அதிமுக மேலிடத்தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வேலூர் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் தனபாலை சிவகங்கை அறநிலையத்துறை இணை ஆணையராக மாற்ற தமிழக அரசு இன்று, உத்தரவிட்டுள்ளது.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications