பரவும் ஓமிக்ரான்.. மக்களே முன்னெச்சரிக்கையாக இருங்க.. பிரதமர் மோடி வேண்டுகோள்
உருமாற்றம் அடைந்த கொரோனா பரவும் நிலையில், மக்கள் விழிப்புணர்வுடனும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்படவேண்டியது அவசியம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை: இந்தியாவில் ஓமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் அதிக கொரோனா பதிவு, போதிய சுகாதார கட்டமைப்பு இல்லாத மாநிலங்களுக்கு மத்திய குழுவை அனுப்பி வைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
உருமாற்றம் அடைந்த கொரோனா பரவும் நிலையில், மக்கள் விழிப்புணர்வுடனும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்படவேண்டியது அவசியம் என்றும் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
உலகம் முழுவதும் ஓமிக்ரான் பரவல் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் 350க்கும் மேற்பட்டோர் ஓமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதியதாக பரவி வரும் ஓமிக்ரான் திரிபு, கொரோனா பாதிப்பு மற்றும் சுகாதார கட்டமைப்பு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையின் கீழ் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் உள்ளிட்ட அதிகாரிகள், கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி சிறப்பு நிபுணர் குழுவினர் பங்கேற்றனர். ஆய்வுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அனைத்து மட்டத்திலும் விழிப்புணர்வுடன் மிக எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தினார்.

ராஜேஷ் பூஷன்
இதில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் உள்ளிட்ட அதிகாரிகள், கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி சிறப்பு நிபுணர் குழுவினர் பங்கேற்றனர். ஆய்வுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அனைத்து மட்டத்திலும் விழிப்புணர்வுடன் மிக எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தினார்.

ஒட்டுமொத்த அரசு
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, அதனை கையாள்வது குறித்து மாநில அரசின் முயற்சிகளுக்கு, மத்திய அரசு மிகவும் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்த அரசு என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

மருத்துவ கட்டமைப்பு
அதிகளவு மரபணு பரிசோதனைக்காக, மாதிரிகளை உரிய முறையில் அனுப்பி வைக்க வேண்டும் எனக் கூறிய மோடி, குறைவான தடுப்பூசி, அதிக கொரோனா பதிவு மற்றும் போதுமான மருத்துவ கட்டமைப்பு இல்லாத மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய மத்தியக்குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Recommended Video

முன்னெச்சரிக்கை
தகுதி வாய்ந்த அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, உருமாற்றம் அடைந்த கொரோனா பரவும் நிலையில், மக்கள் விழிப்புணர்வுடனும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்படவேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். ஓமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேச மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு












Click it and Unblock the Notifications