வண்ண வண்ண பூக்கள்.. காணும் இடமெல்லாம் அத்தப்பூ கோலம்.. இன்று ஓணம் பண்டிகை.. கேரள மக்கள் கொண்டாட்டம்
சென்னை: இன்று ஓணம் பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.. ஓணம் பண்டிகை என்பதால் கேரள மக்கள் மகிழ்ச்சியுடன் திருநாள் வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் தெரிவித்தும், சிறப்பித்தும், வருகிறார்கள்.
தமிழ் புத்தாண்டின் முதல் மாதமாக சித்திரை மாதம் கொண்டாடப்படுவது போலவே, கேரளாவில் சிங்கம் என்ற பெயரில் ஆவணி மாதம்தான், மலையாள ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் அத்தப்பூ கோலத்துடன் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்களுக்கு சாதி, மத வேறுபாடுகளை மறந்து ஓணம் பண்டிகையை கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
10 நாட்களும் கொண்டாட்டம்: இந்த 10 நாட்களிலும் 10 வகை பூக்களை வைத்தும் அத்தப்பூ கோலம் போட்டும் பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.. அந்தவகையில், இன்றைய தினம் ஓணம் பண்டிகை கோலாகலமாக கேரளாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
பண்டைய காலத்தில் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னனின் நினைவாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.. திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு உள்பட முக்கிய நகரங்களில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன...
காய்கறிகள்: கடந்த 10 நாட்களுக்கும் மேலாகவே, பூக்கோலம் போடுவதற்கு பூக்களை வாங்குவதற்கும், ஓணம் சத்யா என்று அழைக்கப்படும் விருந்து படைக்க காய்கறிகள், மளிகை சாமான்களை வாங்குவதற்கும், குடும்பம் குடும்பமாக மக்கள் பாலக்காடு நகரில் ஒன்று திரண்டுவிட்டனர்.
இதனால், காலையிலேயே பாலக்காடின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிட்டது.. குறிப்பாக, பெரிய கடை வீதி, டவுன் பஸ் ஸ்டாண்ட் சாலை, கோர்ட் ரோடு, கல்லுாரி சாலை, ஜிபி ரோடு, ஸ்டேடியம், பஸ் ஸ்டாண்ட் பகுதி போன்ற இடங்களில் வாகனங்கள் வரிசை கட்டி நின்றன.. இதனால், போலீசார் இந்த டிராபிக்கை சீர்படுத்துவதற்குள் திணறிவிட்டனர்..
பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக சபரி மலை கோயிலில் நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.. சபரி மலையில் நேற்று முதல் திருவோண நட்சத்திரத்திற்கான சிறப்பு பூஜைகளும் ஆரம்பமாகி உள்ளன. பாலக்காடு ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.. இந்த பண்டிகைக்கு புத்தாடை எடுக்க பொதுமக்கள் திரண்டு கடைகளுக்கு சென்றனர்..
விழாக்கோலம்: இன்று பண்டிகை என்பதால், கேரள மக்கள் அதிகாலையிலேயே எழுந்து வீட்டு முன்பு அத்தப் பூ கோலம் போட்டு கொண்டாட்டங்களை தொடங்கினார்கள்.. பிறகு, அனைவரும் புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்று வழிபாடுகளை நடத்தினார்கள்.
மேலும், தங்களது சொந்தபந்தங்கள், அக்கம்பக்கத்தினருக்கு உணவு, உடை மற்றும் பரிசு பொருட்களை அளித்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறி கொண்டனர். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்பது கேரளா பழமொழி. அதற்கேற்ப, அறுசுவைகளில் கசப்பை தவிர மற்ற காய்கறிகளை வைத்து 64 வித உணவு வகைகளை கேரள மக்கள் தயாரித்து பரிமாறி மகிழ்ந்து வருகிறார்கள்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications