ஏங்க இருங்க.. கம்முனு இரு! நிருபரெல்லாம் இருக்காங்க.. என்னங்குற! ஆவேசமான எடப்பாடி.. அதிர்ந்த போலீஸ்
சென்னை: அதிமுகவினரையும், தன்னையும் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்ற முற்பட்ட காவலர்களிடம் எடப்பாடி பழனிசாமி எகிறிய நிகழ்வு கவனம் ஈர்த்துள்ளது.
ஏங்க இருங்க.. கம்முனு இரு.. நிருபரெல்லாம் இருக்காங்க.. என்னங்குற.. எனக் கேட்டு எடப்படி பழனிசாமி ஆவேசமடைந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பை முடித்த பிறகே காவல்துறை வாகனத்தில் ஏறினார் எடப்பாடி பழனிசாமி.

ஜனநாயக படுகொலை
தமிழக சட்டசபையில் ஜனநாயக படுகொலை நடப்பதாக கூறி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது என அறிவுறுத்திய காவல்துறையினர் அதிமுகவினரையும், எடப்பாடி பழனிசாமியையும் கைது செய்தனர். இதையடுத்து காவல்துறையினர் வாகனத்தில் ஏறுவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி.

'ஏங்க இருங்க'
அப்போது அவரைச் சுற்றி நின்ற அதிமுகவினரை வேனில் ஏறுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். இதனால் ஏற்பட்ட சலசலப்பை தொடர்ந்து பேட்டிக்கு மத்தியில் போலீஸாரை பார்த்து டென்ஷனான எடப்பாடி பழனிசாமி, ''ஏங்க இருங்க.. கம்முனு இரு.. நிருபரெல்லாம் இருக்காங்க.. இப்ப என்னங்குற..'' என ஆவேசமடைந்தார். இதையடுத்து அங்கிருந்த தொண்டர்களும், நிர்வாகிகளும் போலீஸ் அராஜகம் ஒழிக என கோஷமிட்டனர். இதனால் அந்த இடம் பரபரப்பானது.

எடப்பாடி கோபம்
ஆனால் போலீஸார் நிலைமையை இன்னும் சிக்கலாக்க விரும்பாததால் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பை முடிக்கும் வரை காத்திருந்தனர். அப்போதும் அரசுக்கு எதிராகவும், காவல்துறையினருக்கு எதிராகவும் அதிமுகவினர் முழக்கங்கள் எழுப்பினர். பேசிக்கொண்டிருந்த போதே எடப்பாடி பழனிசாமிக்கு வந்த கோபத்தை பார்த்து அவரது சொந்தக் கட்சிக்காரர்களே ஒரு நிமிடம் அதிர்ந்து போனார்கள்.

சபையில் ஓபிஎஸ்
எடப்பாடி பழனிசாமி சாலையில் அமர்ந்து இப்படி ஒரு பக்கம் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த வேளையில் மற்றொரு பக்கம் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் கூலாக அமர்ந்திருந்தார். காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் விடுவிக்கப்படுவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications