கண்டிப்பாக இதை செய்தே ஆகணும்! சென்னை மேயர் பிரியாவை சந்தித்த செளமியா அன்புமணி! என்ன காரணம் தெரியுமா?
சென்னை : சென்னை மாநகருக்கான காலநிலை மாற்ற வரைவு அறிக்கையில் காற்று மாசுபாடு , உயிர் பன்மைத்துவம் குறித்த செயல்திட்டங்கள் இடம்பெற வேண்டும் எனவும், வரைவு அறிக்கை குறித்து சென்னையில் 200 வார்டுகளிலும் பொதுமக்களின் கருத்தை கேட்க வேண்டும் என பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் மாநகராட்சி மேயர் பிரியாவை சந்தித்த பிறகு சௌமியா அன்புமணி கூறியுள்ளார்.
சென்னை மாநகருக்கான ' காலநிலை மாற்ற செயல்திட்ட வரைவு அறிக்கை ' மாநகராட்சி இணையதளமான www.chennaicorporation.gov.in ல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அக்டோபர் 26 ம் தேதி வரை பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி , சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மேயர் பிரியாவை சந்தித்து வரைவு செயல் திட்டம் குறித்த தங்களது அமைப்பின் கருத்துகளை அறிக்கையாக சமர்ப்பித்தார்.

செளமியா அன்புமணி
சென்னைக்கான காலநிலை மாற்ற செயல்திட்ட வரைவு அறிக்கையில் காற்று மாசுபாட்டை குறைப்பது தொடர்பாகவும் , பயோ டைவர்சிட்டி எனும் உயிர் பன்மைத்துவம் குறித்தும் கருத்துகள் இடம் பெறவில்லை என்று தெரிவித்த அவர் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ள 66 செயல்திட்டங்கள் குறித்தும் விரிவான விளக்கங்கள் இடம்பெற வேண்டும் எனவும் மாநாகராட்சிக்கு கோரிக்கை விடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," பசுமைத் தாயகம் சார்பில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் உட்பட பல இடங்களில் மரக்கன்று நட்டு நடுகிறோம் . காலநிலை மாற்றம் குறித்து 20 ஆண்டுகளாக பேசி வரும் ஒரே அமைப்பு பசுமைத் தாயகம்தான்.

காலநிலை மாற்ற வரைவு அறிக்கை
சென்னையில் காலநிலை மாற்ற வரைவு அறிக்கையை வெளியிட்டு கருத்து தெரிவிக்க இன்று இறுதி நாள் என்று கூறியிருந்தனர். அதை நீட்டிக்கவும் , தமிழில் வெளியிடவும் மேயரிடம் கோரிக்கை விடுத்தோம். சென்னைக்கு வெளியிடப்பட்டுள்ள வரைவு அறிக்கையில் 66 திட்டங்கள் கூறப்பட்டுள்ளது , ஆனால் அதுபற்றி விரைவாக விளக்கப்படவில்லை. தமிழகத்தில் மக்கள் தொகை 7.5 கோடி. சென்னையில் மட்டும் ஒரு கோடி நபர்கள் வசித்து வருகின்றனர். சுற்றுச்சூழலை சீரமைக்க விரிவான திட்டம் தேவை , அவசர கதியில் அதை செயல்படுத்த முடியாது. நீடித்த செயல்திட்டமாக அது இருக்க வேண்டும்.

சென்னை வெள்ளம்
கடலோரம் வசிப்போர் , விளிம்புநிலையில் வாழ்வோரிடம் காலநிலை மாற்றம் குறத்து அதிகளவில் விழிப்புணர்வை மாநகராட்சி ஏற்படுத்த வேண்டும். செஸ் ஒலிம்பியாட்டிற்கு வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் போல , காலநிலை மாற்ற விழிப்புணர்வு பலகைகளும் பல இடங்களில் வைக்கப்பட வேண்டும். சென்னையில் 200 வார்டுகளிலும் பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும். 2015 ல் ஏற்பட்ட சென்னை வெள்ளத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாம் விரும்பும் சென்னை
தற்போது வெளியிடப்பபட்ட அறிக்கையில் காற்று மாசு குறித்த பரிந்துரை இல்லை , bio diversity அழிவு குறித்தும் கருத்துகள் இடம் .பெறவில்லை. சிட்டுகுருவி , கிளிச்சத்தம் இல்லாமல் போக காரணம் bio diversityஅழிவுதான். சென்னை மாநகரை மேம்படுத்துவதற்காக 'நாம் விரும்பும் சென்னை ' என்ற அறிக்கையை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். 204 அமைப்பனரிடம் பேசி சென்னைக்கான அறிக்கையை வெளியிட்டதாக கூறியுள்ளார். ஆனால் 20 ஆண்டுகளாக செயல்படும் எங்களிடம் எதுவும் கேட்கவில்லை . சென்னை மாநகருக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்க பசுமைத் தாயகம் தயாராக இருக்கிறது.

மக்கள் பங்களிப்பு
கூவம் சீரமைப்பிற்கு ஒதுக்கப்பட்ட 200 கோடி நிதி வீணாகிவிட்டது , 2007 முதல் சென்னையில் சாலை பாதுகாப்பு திட்டம் அமலில் இருந்ததாலும் அது பயன்தரவில்லை, சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் நகரமாகவே சென்னை இப்போதும் இருக்கிறது . சென்னையில் பொதுப்போக்குவரத்து குறைந்துவிட்டது . சென்னையில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு மழைநீர் கால்வாய் பணிகளை நிறைவுசெய்ய வேண்டும். சுற்றுச்சூழல் குறித்த விசயங்களில் மக்கள் பங்களிப்பு அவசியம் , எனவே பொதுமக்களிடம் கருத்துகளை கேட்க வேண்டும் ". என்று கூறினார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications