பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு.. தொடர்ந்து 4வது முறையாக தமிழக அரசு அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உடல்நலக்குறைவை காரணம் காட்டி, பரோல் காலத்தை நீட்டிக்க, அற்புதம்மாள் விடுத்த கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு பரோல் காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 49 வயதாகும் பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

Perarivalan granted 30 days parole on medical grounds by Tamil Nadu government

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை விடுத்தார். இதை பரிசீலித்த தமிழக அரசு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது.

எனவே, மே மாதம் 28ம் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார் பேரறிவாளன். சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு பேரறிவாளன் மருத்துவ சிகிச்சை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

பரோல் காலம் முடிந்து கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்பியபோது, மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. பிறகு ஜூலை 28ம் தேதி பரோல் முடிவடைவதால் பேரறிவாளன் சென்னை புழல் சிறைக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளை காவல் துறையினர் மேற்கொண்ட நிலையில், பேரறிவாளனின் பரோல் காலத்தை மேலும் நீடிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதை ஏற்ற தமிழக அரசு, பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்தது.

பிறகு ஜூலை 28ம் தேதி பரோல் முடிவடைதால் பேரறிவாளன் சென்னை புழல் சிறைக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளை காவல் துறையினர் மேற்கொண்ட நிலையில், பேரறிவாளனின் பரோல் காலத்தை மேலும் நீடிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதை ஏற்ற தமிழக அரசு, பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்தது.

இப்போது மறுபடியும் பரோல் நீட்டிப்பு செய்ய அற்புதம்மாள் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஒரு மாத காலம் பரோலை நீட்டித்துள்ளது.
பரோல் காலத்தை பேரறிவாளன் இதுவரை என்னென்ன விதிமுறைகளை கடைப்பிடித்து வந்தாரோ அதையே பின்பற்ற வேண்டும் என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+