4வது முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு.. மாவட்ட வாரியாக விலை நிலவரம் என்ன?
சென்னை : சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் 5வது நாளாக இன்றும் விலை 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 104.43 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.4 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்ற வந்த நிலையில் கடந்த பல நாட்களாக நாட்டில் பெட்ரோல் டீசல் விலை எந்தவிதமான மாற்றங்களும் இல்லாமல் தொடர்ந்து ஒரே விலையில் நீடித்து வருகிறது.

பெட்ரோல் டீசல் விலை
கடந்த 5 நாட்களுக்கு முன்னர் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101.40 ரூபாயாகவும் ஒரு லிட்டர் டீசலின் விலை 91.43 ரூபாயாகவும் உள்ளது. ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 111 டாலரை தொட்டு நிலையில் இந்தியாவில் தேர்தல் காரணமாகவே பெட்ரோல் டீசல் விலைகள் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு
இந்நிலையில் கடந்த நாட்களாக சர்வதேச சந்தையில் உக்ரைன் போர் காரணமாக கச்ச எண்ணெய் விலை அதிகரிப்பதால் விலை உயரலாம் என கணிக்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்றுமுன் தினம் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ரூ.102. 91 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.92. 95 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றும் உயர்வு
சென்னையில் பெட்ரோல், விலை நேற்று லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.103.67 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.93.71 காசுகளுக்கும் விற்பனையாகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களைப் போலவே 5வது நாளில் 4வது முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்றும் 76 காசுகள் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.43-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.47-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Recommended Video

விலை நிலவரம்
தற்போதைய நிலவரப்படி சென்னையில் ரூ.104.43க்கும், கோவையில் ரூ.104.95க்கும், மதுரையில் ரூ.105.00க்கும், திருச்சி ரூ.105.19க்கும், சேலத்தில் ரூ.105.54க்கும், அரியலூரில் ரூ.105.67க்கும், அதிகபட்சமாக மாவட்ட அளவில் கடலூரில்- ரூ.106.55க்கும் பெட்ரோல் விற்பனையாகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், போலவே சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலை இந்த வாரம் உயர்த்தப்பட்டது. டெல்லி அடங்கிய தலைநகர் பிராந்தியத்தில் சிஎன்ஜி மற்றும் குழாய் வழியாக வீட்டு சமையலறைக்கு வினியோகிக்கப்படும் சமையல் எரிவாயு விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications