பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் - சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துங்கள் -விஜயகாந்த் வலியுறுத்தல்!
சென்னை: பெட்ரோல் குண்டு வீச்சு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டித்து, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை உடனடியாக நிலை நிறுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒருசில பகுதிகளில் சில மர்ம நபர்கள், பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் குண்டுகளை வீசி தாக்குல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, பாஜக பிரமுகர்கள், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளின் வீடு, கார், இருசக்கர வாகனங்கள் மீது குண்டுகள் வீசப்படுகின்றன. கோவை, திண்டுக்கல், சேலம், ராமநாதபுரம், மதுரை, சென்னை, திருப்பூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் குண்டுகள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து, பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை, சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகள் மூலம், தமிழக காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். மேலும், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் குற்றவாளிகளை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்து வருகின்றனர். எனினும், ஆங்காங்கே இதுபோன்ற விரும்பதகாத சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிதான் வருகிறது.
தமிழகத்தில் நிலவி வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கு, பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை உடனடியாக நிலை நிறுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்வி குறியாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் என பல்வேறு குற்றச் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன.
தற்போது, பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரம் தமிழகத்தில் பரவி வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. கோவை, திருப்பூர், ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் மக்களிடையே பெரும் அச்சுறுத்தலையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதன்மூலம், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு தவறிவிட்டதோ? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
அதேசமயம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என தமிழக அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் இனிமேல் நடைபெறா வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு முழு கவனம் செலுத்தி, பெட்ரோல் குண்டு வீச்சு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டித்து, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை உடனடியாக நிலை நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்வதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications