ஜல்லிக்கட்டுக்கு பிரம்மாண்ட அரங்கம்.. விரைவில் கட்டுமான பணிகள்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
சென்னை: மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான பிரம்மாண்ட அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஸ்போர்ட்ஸ்டார் சவுத் ஸ்போர்ட்ஸ் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னையில் ஸ்போர்ட்ஸ்டார் சவுத் ஸ்போர்ட்ஸ் மாநாடு நடைபெற்று வருகிறது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதாவது அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்து துறைக்குமான வளர்ச்சி, அனைத்து மாவட்டத்துக்குமான வளர்ச்சி எல்லாவற்றையும் கடந்து, அனைத்து சமூகத்திற்குமான வளர்ச்சி. இதனை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

செஸ் ஒலிம்பியாட்
வளர்ச்சி என்பது வெறும் தொழிற் வளர்ச்சி என்பது அல்ல. அனைத்து துறையிலும் தமிழ்நாடு வளர்ச்சியடைய வேண்டும். அப்படி விளையாட்டுத் துறையிலும் தமிழ்நாடு வளர்ச்சியடைய வேண்டும். அதற்கான முக்கிய நடவடிக்கை தான் செஸ் ஒலிம்பியாட் போட்டி.44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 200க்கும் அதிகமான நாடுகள், 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக செஸ் ஒலிம்பியாட் போட்டி இடமாற்றம் செய்யப்பட்டது. அப்போது உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொண்டதால், தமிழ்நாட்டிற்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம்
இந்தியாவில் நடைபெறும் முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டி இது. அது சென்னையில் நடைபெறுகிறது. இதன்மூலம் சர்வதேச அளவில் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் கிடைக்கும். செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதன் மூலம் தமிழக அரசு பெருமை கொள்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் இந்த சூழலில், மாநாடு நடைபெறுவது பொருத்தமாக அமைந்துள்ளது.

கிரிக்கெட்டில் ஈடுபாடு
நானும் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஈடுபாடு உள்ளவன். பள்ளிக் காலத்தில் இருந்தே கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதை தவறவிட மாட்டேன். மேயராக இருந்தபோடும், கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். எத்தகைய சூழலிலும், கிரிக்கெட் பார்ப்பதை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தவறவிட மாட்டார். விளையாட்டுத்துறை கம்பீரமான துறை.

ஜல்லிக்கட்டு அரங்கம்
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தபின், விளையாட்டு வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். பல்வேறு வீரர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கியுள்ளோம். சென்னை, கிருஷ்ணகிரி பகுதிகளில் விளையாட்டு அரங்கங்கள் திறக்கப்படவுள்ளது. சர்வதேச மற்றும் தேசிய அளவில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவையெல்லாவற்றுக்கும் கிரீடம் வைத்தது போல், மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு பிரம்மாண்ட அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் அதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications