ஜல்லிக்கட்டுக்கு பிரம்மாண்ட அரங்கம்.. விரைவில் கட்டுமான பணிகள்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
சென்னை: மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான பிரம்மாண்ட அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஸ்போர்ட்ஸ்டார் சவுத் ஸ்போர்ட்ஸ் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னையில் ஸ்போர்ட்ஸ்டார் சவுத் ஸ்போர்ட்ஸ் மாநாடு நடைபெற்று வருகிறது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதாவது அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்து துறைக்குமான வளர்ச்சி, அனைத்து மாவட்டத்துக்குமான வளர்ச்சி எல்லாவற்றையும் கடந்து, அனைத்து சமூகத்திற்குமான வளர்ச்சி. இதனை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

செஸ் ஒலிம்பியாட்
வளர்ச்சி என்பது வெறும் தொழிற் வளர்ச்சி என்பது அல்ல. அனைத்து துறையிலும் தமிழ்நாடு வளர்ச்சியடைய வேண்டும். அப்படி விளையாட்டுத் துறையிலும் தமிழ்நாடு வளர்ச்சியடைய வேண்டும். அதற்கான முக்கிய நடவடிக்கை தான் செஸ் ஒலிம்பியாட் போட்டி.44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 200க்கும் அதிகமான நாடுகள், 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக செஸ் ஒலிம்பியாட் போட்டி இடமாற்றம் செய்யப்பட்டது. அப்போது உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொண்டதால், தமிழ்நாட்டிற்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம்
இந்தியாவில் நடைபெறும் முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டி இது. அது சென்னையில் நடைபெறுகிறது. இதன்மூலம் சர்வதேச அளவில் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் கிடைக்கும். செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதன் மூலம் தமிழக அரசு பெருமை கொள்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் இந்த சூழலில், மாநாடு நடைபெறுவது பொருத்தமாக அமைந்துள்ளது.

கிரிக்கெட்டில் ஈடுபாடு
நானும் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஈடுபாடு உள்ளவன். பள்ளிக் காலத்தில் இருந்தே கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதை தவறவிட மாட்டேன். மேயராக இருந்தபோடும், கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். எத்தகைய சூழலிலும், கிரிக்கெட் பார்ப்பதை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தவறவிட மாட்டார். விளையாட்டுத்துறை கம்பீரமான துறை.

ஜல்லிக்கட்டு அரங்கம்
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தபின், விளையாட்டு வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். பல்வேறு வீரர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கியுள்ளோம். சென்னை, கிருஷ்ணகிரி பகுதிகளில் விளையாட்டு அரங்கங்கள் திறக்கப்படவுள்ளது. சர்வதேச மற்றும் தேசிய அளவில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவையெல்லாவற்றுக்கும் கிரீடம் வைத்தது போல், மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு பிரம்மாண்ட அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் அதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications