அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.. முதல் ஆளாய் உளமாற வாழ்த்திய அன்புமணி
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக அக்கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் கடந்த ஒரு மாதகாலமாகவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இபிஎஸ், ஒபிஎஸ் என்ற இரட்டை தலைமை முடிவுக்கு வந்து அதிமுகவில் இனி எல்லாமே எடப்பாடி பழனிச்சாமிதான் என்ற நிலை உருவாகியுள்ளது.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்றைய தினம் அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
பொதுக்குழுவில் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்படுவார். அதன்படி தொண்டர்கள் மூலம் வாக்குகள் செலுத்தப்பட்டு அவர் நிரந்தர பொதுச்செயலாளர் ஆவார். இதன் மூலம் அவரின் பதவிக்கு சட்ட ரீதியாக பலமான ஆதரவு கிடைக்கும். அத்துடன் இந்த பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல் ஆளாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக அக்கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications