Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொலையாளிகளாக மாறும் இளைய தலைமுறை..ஆன்லைன் சூதுதான் காரணம்! புதிய சட்டம் தேவை என ராமதாஸ் வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஆன்லைன் சூதாட்டம் மாணவர்களை கொலைகாரர்களாக ஆக்குவதாகவும், இதுபோன்ற சமூக தீமையை ஒழிக்க புதிய சட்டமே தீர்வு என பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆன்லைன் சூதாட்டத்திற்கு பணம் தேவைப்பட்டதால் மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வேப்பூர் சேர்ந்த பட்டாத்தாள் என்ற 75 மூதாட்டி கடந்த 6ஆம் தேதி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் அவர் அணிந்திருந்த நகைகள் மாயமானது.

மூதாட்டி கொலை

மூதாட்டி கொலை

குறித்து அப்பகுதியில் உள்ள நகை அடகு கடைகளில் போலீசார் விசாரணை நடத்திய போது அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவன் மூதாட்டியின் நகையை அடகுவைத்து தெரியவந்தது. இதையடுத்து பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த சூர்யாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆடம்பர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு மூதாட்டியை கொன்று நகைகளை பறித்தது தெரியவந்தது இந்நிலையில்

பாமக நிறுவனர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ்

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டம் மாணவர்களை கொலைகாரர்களாக ஆக்குவதாகவும், இதுபோன்ற சமூக தீமையை ஒழிக்க புதிய சட்டமே தீர்வு என பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்ட பதிவில், "கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவதற்காக மூதாட்டியை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.

அரங்கேறும் கொலை

அரங்கேறும் கொலை

இத்தகைய கொடூரம் இதுவே கடைசியாக இருக்க வேண்டும்! ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சோகம் இதுவரை நடந்து வந்தது. இப்போது பணத்துக்காக கொலை செய்யும் கொடூர நிகழ்வுகள் அரங்கேறத் தொடங்கி இருப்பதிலிருந்தே ஆன்லைன் சூதாட்டம் இன்னும் கொடிய வடிவம் எடுப்பதை அறிய முடியும்!ஆன்லைன் சூதாட்டங்களை ஒழிப்பதன் மூலம் தான் தற்கொலைகளையும், இளைய தலைமுறையினரின் சீரழிவையும் தடுக்க முடியும்.

புதிய சட்டம் தேவை

புதிய சட்டம் தேவை

அதற்காக உடனடி நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்!ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் முன்னேற்றம் இல்லாமல் கிடக்கிறது. அதில் சாதகமான தீர்ப்பும் கிடைக்காது. எனவே, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய புதிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்!" என பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+