ரொம்ப நேரம் பட்டாசு வெடிச்சா போலீஸ் டீம் போட்டு கைது செய்வீர்களா? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி
தீபாவளி அன்று மக்கள் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அரசு என்ன போலீஸ் டீம் போட்டு கண்காணிக்குமா என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

சென்னை: தீபாவளி அன்று மக்கள் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அரசு என்ன போலீஸ் டீம் போட்டு கண்காணிக்குமா என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

வடமாநிலங்களில் இரவு 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. தென்மாநிலங்களும் இரண்டு மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க முடியும். ஆனால் அந்த இரண்டு மணி நேரத்தை தென் மாநிலங்கள் தங்களுக்கு ஏற்றபடி தேர்வு செய்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளது.
இந்த திடீர் விதிகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பாஜக கட்சியை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த விதிமுறை குறித்து கருத்து கூறியுள்ளார். யார் எப்போது வெடி வெடிக்கிறார்கள் என்று அரசு எப்படி கண்காணிக்க முடியும் என்று கேட்டுள்ளார்.
அவர் தனது பேட்டியில், காலங்காலமாக கொண்டாடப்படும் பண்டிகைகள் சிதைக்கப்படுவதை மக்கள் எப்போதுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்களிடம் இவர்கள் எந்த சட்டத்தை புகுத்த பார்க்கிறார்கள்.
பட்டாசு வெடிப்பது 90 சதவீதம் குழந்தைகள், மாணவர்கள்தான். அவர்களை எதை வைத்து தடுப்பார்கள். இவர்களை என்ன செய்ய போகிறார்கள்.
யார் எப்போது வெடி வெடிக்கிறார்கள் என்று அரசு எப்படி கண்காணிக்க முடியும். எல்லா வீட்டுக்கும் போலீஸ் போட போகிறார்களா. இல்லை தெருவுக்கு ஒரு டீம் போட்டு கண்காணிக்க போகிறார்களா? அதிக நேரம் பட்டாசு வெடிப்பவர்களை கைது செய்வீர்களா?
தீபாவளியை போலவே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இப்படி செய்வார்களா? கிறிஸ்துமஸ் விழாவில் பட்டாசு வெடிக்கக்கூடாது. ஆடு, மாடு வெட்டக்கூடாது என்று சட்டம் போட தயாரா?
இது மக்கள் கூடி பல வருடமாக கொண்டாடும் பாரம்பரிய சந்தோச விழாக்கள். இதை சீரழிக்க யோசிக்க கூடாது என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications