ஹலோ மிஸ்டர்.. நீங்க தேசிய கட்சியின் தலைவர் வேற! அண்ணாமலைக்கு கிளாஸ் எடுத்த பூவுலகின் நண்பர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், காற்று மாசு என்பதை கணக்கில் கொள்ளாமல் நிறைய பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிப்பது நமது கலாச்சாரம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலையின் இந்த கருத்துக்கு 'பூவுலகின் நண்பர்கள்' குழு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு எந்த அளவுக்கு ஏற்படுகிறது என்பது குறித்து அக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

ஒன்னும் ஆகாது

ஒன்னும் ஆகாது

தீபாவளி பண்டிகை களைக்கட்டியுள்ள நிலையில், நேற்று (அக்.22) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "சிவகாசியில் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் கஷ்டப்படுகிறார்கள். எனவே இந்த முறை நிறைய பட்டாசு வாங்கி வெடியுங்கள். தீபாவளி ஒரு நாள்தான் எனவே அன்று பசுமை பட்டாசுகள் கூட அதிகமாக வெடியுங்கள். குழந்தைகளுக்கும் நிறைய பட்டாசு வாங்கி கொடுங்கள். பட்டாசு வெடிப்பது நமது கலாச்சாரம். காற்று மாசையெல்லாம் ஒரு நாள் பார்க்காதீர்கள். ஒருநாள் வெடிப்பதால் ஒன்னும் ஆகாது." என்று கூறியிருந்தார்.

பாதிப்பு

பாதிப்பு

இதற்கு 'பூவுலகின் நண்பர்கள்' குழு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் சுந்தர் ராஜன் கூறுகையில், "நிறைய பட்டாசு வெடிங்க, ஒரு நாள் வெடிப்பதால் காற்று மாசு ஏற்படாது என்கிறார் அண்ணாமலை. இவர் ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர், முன்னாள் இகாப அதிகாரி, கொடுமை. தீபாவளிக்கு பிறகு என்றாவது ஒரு நாள் வடசென்னை அல்லது ஏன் டில்லியில் கூட ஒரு மருத்துவமனைக்கு போய் பார்த்தால் தெரியும் பட்டாசு மாசால் எவ்வளவு பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று.

 உயிரிழப்பு

உயிரிழப்பு

மிஸ்டர், உலகம் முழுவதும் காற்று மாசால் 1 கோடி பேர் இறக்கிறார்கள். உங்களுக்கு ஓட்டுப் போடும் வட இந்தியர்களின் வாழ்வு காலம் 7.5 ஆண்டுகள் காற்று மாசால் குறைவதாகவும், தென் இந்தியர்கள் 2.5 ஆண்டுகளை இழப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காற்று மாசிற்கு பட்டாசு மட்டுமே காரணம் என சொல்லவில்லை, ஆனால் பட்டாசும் ஒரு காரணம். அறிவியல் தரவுகளையும் ஆய்வுகளையும் எப்போதாவது படித்துப்பாருங்கள், எப்போதுமே மதம், மதம் என்று யோசித்துக்கொண்டிருந்தால் "மதம்" பிடித்துவிடும். இவ்வளவிற்கும் உங்கள் கட்சியின் அரசுதான் பட்டாசு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்துள்ளது." என்று கூறியுள்ளார்.

சிறை தண்டனை

சிறை தண்டனை

நாள் முழுவதும் வெளியேற்றப்படும் வாகன புகை, தொழிற்சாலை புகை என இருக்கும் போது ஒரு நாள் வெடிக்கும் பட்டாசு காரணமாகதான் மாசு ஏற்படுகிறதா? என்று பலர் கேள்வியெழுப்பியுள்ளனர். தேசிய தலைநகர் டெல்லியில் இந்தாண்டுடன் சேர்ந்து மூன்று ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பட்டாசு வெடிப்பவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+