பிரதமர் மோடி வருகை: சென்னையில் பாதுகாப்பு ஒத்திகை - போக்குவரத்து மாற்றம்

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் செல்லும் பகுதியில் டிரோன் கேமராவுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக சென்னை வர உள்ள நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பத்தாயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் இன்று ஒத்திகை நடைபெறுகிறது. பிரதமர் செல்லும் பாதையில் ட்ரோன் கேமரா பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    சென்னை: நாளை பிரதமர் மோடி வருகை… 5 மணிநேரம் போக்குவரத்தில் மாற்றம்!

    பிரதமர் நரேந்திரமோடி நாளை ஞாயிறுக்கிழமை ஒரு நாள் சுற்றுப்பயணமாக சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில், சென்னை தீவுத்திடல் அருகே உள்ள அடையாறு ஐ.என்.எஸ் கடற்படை தளத்தில் வந்து இறங்குகிறார்.

    Prime Minister Modis visit: 10 thousand policemen in Chennai - traffic change

    அங்கிருந்து கார் மூலம் நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வரும் மோடிக்கு வழி நெடுக பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அவர் பிற்பகல் 1.30 மணி அளவில் தனி விமானம் மூலம் கேரளா செல்கிறார்.

    மூன்று மணி நேரமே மட்டுமே சென்னையில் இருக்கும் பிரதமர் மோடி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    பிரதமர் நரேந்திரமோடி விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளம் வந்து இறங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவர் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாகவும், நேரு உள் விளையாட்டு அரங்கம் வருவதற்கு மாற்று ஏற்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளது. அந்த சாலை பகுதிகளிலும் வழி நெடுக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.

    இன்று முதலே அடையாறு ஐ.என்.எஸ் கடற்படை தளத்தில் இருந்து நேரு உள் விளையாட்டு அரங்கம் செல்லும் சாலை முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகர மகேஷ்குமார்அகர்வால், பிரதமரை வரவேற்க ஒரு லட்சம் பேர் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரதமர் வருகையையொட்டி சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்படுகிறார்கள். பிரதமர் பயணிக்க உள்ள பகுதியில் பாதுகாப்பு ஒத்திகையும் நடத்தப்படும். பிரதமரின் வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் செல்லும் பகுதியில் டிரோன் கேமராவுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கம் உள்ள பகுதியில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்பு படை காவலர்கள் வியாழக்கிழமை முதலே பாதுகாப்பு ஏற்பாடுகளை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு விட்டனர். மத்திய-மாநில உளவுப்பிரிவு இப்போதிருந்தே, கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+