சென்னையில் மழை உண்டு.. 18-ஆம் தேதிக்கு பிறகு வங்கக் கடலில் மீண்டும் புயல்- தனியார் வானிலை ஆய்வாளர்
Recommended Video
சென்னை: தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக வரும் 18-ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கத்தரி வெயில் கடந்த மே 4-ஆம் தேதி தொடங்கிய பிறகு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் 10 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. கோடை மழை அடுத்த சில நாட்களும் தொடரும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

18-ஆம் தேதி நல்ல மழை
இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் எஸ் ராமசந்திரன் கூறுகையில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் வரும் 18-ஆம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. படிப்படியாக மழை பெய்ய ஆரம்பித்து 18-ஆம் தேதி நல்ல மழை பெய்யும்.

வெயிலின் தாக்கம்
அதே வேளையில் பகல் நேரங்களில் அனல் காற்றின் தாக்கமும் அதிகமாக இருக்கும். சென்னையில் 107 டிகிரி வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வங்கக் கடல்
சென்னையில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புண்டு. வரும் 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மிதமான மழையை எதிர்பார்க்கலாம். வரும் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வங்கக் கடலில் புயல் உருவாகவுள்ளது.

தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு
இந்த புயல் மீண்டும் ஒடிஸா, வங்கதேசம் இடையே கரையை கடக்கும். இந்த புயல் ஆரம்ப நாட்களில் தமிழகத்துக்கு மழையை கொடுக்க வாய்ப்புண்டு என தெரிவித்துள்ளார்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications