நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து களம் காணவும் தயார்! பேராசிரியர் சீனிவாசன் துணிச்சல்!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து களம் காணவும் தயாராக இருப்பதாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே அதிமுக -பாஜக கூட்டணி எப்போதுமே சுமூகமாகவே உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
பாஜக தனித்து போட்டியிட தயார் என்ற பேராசிரியர் சீனிவாசனின் கருத்து அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

மாவட்டத் தலைவர்கள்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக மாவட்டத் தலைவர்களுடன் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தியிருக்கிறார். பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெற்றிவாய்ப்புள்ள இடங்கள், அதிமுகவுடனான கூட்டணி குறித்து விரிவாக பேசியிருக்கிறார்.

தனித்து போட்டியிட
முன்னதாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பாஜக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணவும் தயாராக இருப்பதாக கூறினார். அதிமுக -பாஜக கூட்டணியை பொறுத்தவரை எப்போதுமே சுமூகமான உறவுடன் இருப்பதாக பேராசிரியர் சீனிவாசன் தெரிவித்தார். அதிமுக தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படாதது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றார்.

சுமூக உறவு
மேலும், திமுகவுடன் கூட பாஜகவுக்கு சுமூகமான உறவு இருந்து வருவதாகவும் கொள்கை ரீதியாகவே எதிர் எதிர் அணியில் இருக்கிறோம் எனவும் பாஜக மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் தெரிவித்திருக்கிறார். கட்சித் தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதை ஏற்று செயல்பட தொண்டர்கள் தயாராக இருப்பதாகவும் இன்று கூட்டணி குறித்து மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பார் எனவும் தெரிவித்தார்.

நயினார் கருத்து
அதிமுக தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்து ஒன்று இரு கட்சி நிர்வாகிகளிடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. நீரு பூத்த நெருப்பாக புகைந்து கொண்டே இருப்பதால் இடப்பங்கீடு விவகாரத்தில் அதிமுக -பாஜக இடையே இழுபறி நீடித்து வருவது கவனிக்கத்தக்கது.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications