தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் 5 & 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு.. திடீர் அறிவிப்பால் குழப்பம்
சென்னை: தமிழகத்தில், இந்த ஆண்டே, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 மணி நேரம் இந்த தேர்வுகளுக்கான கால அளவாகும். ஒருவேளை இதில் தேர்ச்சி பெறாவிட்டால், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தோல்வியடைந்த பாடங்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட வேண்டும். அதில் வெற்றி பெற்றால் அடுத்த வகுப்புக்குச் செல்ல முடியும். ஒருவேளை தோல்வி அடைந்தால், அதே வகுப்பில் கல்வியைத் தொடர வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2018-19 ஆம் கல்வி ஆண்டு முதலே இந்த பொதுத்தேர்வு அமலுக்கு வர உள்ளது. பொதுத்தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது. அதேநேரம், தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 50 ரூபாய் தேர்வு கட்டணமும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.100 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள்களை வட்டார வள மையங்களில் வைக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெற்றால், பள்ளி வரும் குழந்தைகள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்பதால் இதை செயல்படுத்த தமிழக அரசு யோசித்தபடி இருந்தது. ஆனால், இந்த வருடமே, இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு திடீர் கல்விச் சுமை அதிகரித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications