காயிதேமில்லத் பிறந்தநாள்! பாரம்பரிய வழக்கத்தை கைவிடாத ஸ்டாலின்! மலர் போர்வை அணிவித்து மரியாதை!
சென்னை: கண்ணியத் தென்றல் என்றழைக்கப்படும் காயிதேமில்லத்தின் 127-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அண்ணா, கருணாநிதி ஆகியோரின் அன்பை பெற்றவராக திகழ்ந்த காயிதே மில்லத், திமுகவின் ஆரம்பக்காலங்களில் கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் பக்கபலமாக துணை நின்றவர்.
கருணாநிதி உடல் நலிவுற்று வீட்டில் ஓய்வெடுத்ததற்கு முன்பு வரை, ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி காயிதேமில்லத் நினைவிடம் சென்று அவருக்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

காயிதேமில்லத்
கண்ணியமிகு காயிதேமில்லத்தின் 127-வது பிறந்தநாள் விழா அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், மலர்களால் தயாரிக்கப்பட்டிருந்த போர்வையை நினைவிடத்தில் போர்த்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அங்கு நடைபெற்ற சிறப்பு து ஆ முடியும் வரை முதல்வர் அங்கேயே இருந்தார்.

அதிமுக மரியாதை
காயிதேமில்லத் நினைவிடத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வந்து சென்ற சிறிது நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அங்கு ஆஜராகி மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் செய்தித் தொடர்பாளர் ஜவஹர் அலி ஆகியோர் உடன் வந்திருந்ததுடன் முன் ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இந்த நிகழ்ச்சியில் ஏனோ மிஸ்ஸிங்.

திருமா மரியாதை
திமுக, அதிமுகவை தொடர்ந்து மதிமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், என வரிசையாக அரசியல் கட்சித் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் காயிதேமில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அந்த வகையில் அங்கு சென்ற விசிக தலைவர் திருமா, காயிதே மில்லத் பிறந்தநாளான ஜூன் 5-ஆம் தேதியை சமூக நல்லிக்கணக்க நாள் என அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

புதிய பல்கலைக்கழகம்
மேலும், தமிழகத்தில் காயிதேமில்லத் பெயரில் புதிய பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அகில இந்திய தலைமை பொறுப்பில் இருந்த காயிதேமில்லத், கேரளாவின் மஞ்சேரி தொகுதியில் பிரசாரத்துக்கு செல்லாமலேயே பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர். நெல்லை மாவட்டத்தில் பிறந்த காயிதேமில்லத்தின் இயற்பெயர் முகமது இஸ்மாயில் ஆகும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications