சென்னையை குளிர்வித்த மழை... சட்டென்று மாறிய வானிலை - 2 மணிநேரத்திற்கு நீடிக்குமாம்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. காலை நேரத்தில் பெய்யும் மழையால் அலுவலகம் செல்பவர்களும் , வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பல ஊர்களில் அதிகாலை மழை பெய்து வரும் நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

Recommended Video

    Tamilnadu-ல் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

    தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை முடிந்து வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளது. நள்ளிரவு முதலே சென்னையின் பல பகுதிகளில் பெய்து வரும் மழையால் குளிர்ந்த காற்று வீசியது. சட்டென்று மாறிய வானிலையால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியடைந்தனர் என்றாலும் காலை நேரத்தில் அலுவலகத்திற்கு செல்பவர்ககளும் பள்ளிக்கு செல்பவர்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    Rain cooled Chennai weather changed suddenly - it will last for 2 hours

    தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை முடிந்து வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளது. நள்ளிரவு முதலே சென்னையின் பல பகுதிகளில் பெய்து வரும் மழையால் குளிர்ந்த காற்று வீசியது. சட்டென்று மாறிய வானிலையால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியடைந்தனர் என்றாலும் காலை நேரத்தில் அலுவலகத்திற்கு செல்பவர்களும் பள்ளிக்கு செல்பவர்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    திண்டுக்கல் தேனி தென்காசி மதுரை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்த நிலையில் டெல்டா மற்றும் சிவகங்கை, கன்னியாகுமரி, கோயமுத்தூர், நீலகிரி ,ஈரோடு, விருதுநகர், திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது

    சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று நள்ளிரவு நேரத்தில் மழை பெய்தது. அதிகாலை முதல் கிண்டி, சைதாப்பேட்டை, சேத்துப்பட்டு, எழுப்பூர், சென்ட்ரல், பிராட்வே உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

    மயிலாப்பூர் ,திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சேப்பாக்கம் ,திருவான்மியூர், அடையார் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னையில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், அலுவலகம் செல்பவர்கள், வாகன ஓட்டிகள் சற்று சிரமத்தை சந்தித்து வந்துள்ளனர். மழை காரணமாக நகரின் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.

    அதேபோல் விழுப்புரம் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, விழுப்புரம், நீலகிரி கோவை ,கள்ளக்குறிச்சி ,தேனி ,திண்டுக்கல், சேலம், நாமக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. சில நாட்களாக வெயிலடித்த நிலையில் அதிகாலை முதல் பெய்து வரும் மழையால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+