வெள்ள நீரில் தத்தளிக்கும் சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணியம் திருக்கோவில்.. பக்தர்கள் அவதி
சென்னை : சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணியம் திருக்கோவில் மழை நீர் புகுந்துள்ளது. இதில் உரிய நடவடிக்கை எடுத்து வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த 7 ம் தேதி பெய்த பேய் மழை மற்றும் 10ம் தேதி மற்றும் 11ம் தேதி பெய்த விடாத மழை காரணமாக சென்னை முழுவதும் மழை நீர் சூழ்ந்து தனி தீவாக காணப்படுகிறது.

இதில் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளும் மிஞ்சவில்லை. தேனாம்பேட்டையில் உள்ள பாலசுப்பிரமணியம் திருக்கோவிலில் முழங்கால் அளவிற்கு மழை நீர் புகுந்துள்ளது.
வெள்ளிக்கிழமை என்றாலே கோவில்களுக்கு செல்வது மக்களின் வழக்கம். இந்நிலையில் கோவிலுக்குள் முழங்கால் அளவிற்கு புகுந்த மழை நீரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சிலர் இறைவனை வழிபட்டு செல்கின்றனர்.
பொதுவாக கோயிலுக்கு வருவது குறைகளை சொல்வதற்கு ஆனால் கோவிலுக்குள்ளே நீர் சூழ்ந்து இவ்வளவு குறைகள் உள்ளது என்பதை யாரிடம் சொல்வது என தெரியவில்லை. கோவிலுக்குள் சூழ்ந்துள்ள மழைநீரை விரைந்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் தெரிவித்தனர்.

அதிக கூட்டம் காணப்படும் இந்த கோவிலை சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளதால் கோவிலுக்கு உள்ளும் மழைநீர் புகுந்து உள்ளது. அதிகாரிகளிடமும் கோவில் நிர்வாகத்திடமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பகுதியில் உள்ள நீரை அகற்றினால் மட்டுமே கோவிலுக்குள் உள்ள நீரை அகற்ற முடியும் என தெரிவித்துள்ளனர். இந்த மழை நீர் வடிய மேலும் ஒரு நாள் ஆகலாம் என நிர்வாகத் தரப்பில் கூறியுள்ளனர். விரைந்து நடவடிக்கை எடுத்தால் சிரமமின்றி பூஜைகளும், பக்தர்கள் வருகையும் இருக்கும் என அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications