வெள்ள நீரில் தத்தளிக்கும் சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணியம் திருக்கோவில்.. பக்தர்கள் அவதி
சென்னை : சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணியம் திருக்கோவில் மழை நீர் புகுந்துள்ளது. இதில் உரிய நடவடிக்கை எடுத்து வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த 7 ம் தேதி பெய்த பேய் மழை மற்றும் 10ம் தேதி மற்றும் 11ம் தேதி பெய்த விடாத மழை காரணமாக சென்னை முழுவதும் மழை நீர் சூழ்ந்து தனி தீவாக காணப்படுகிறது.

இதில் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளும் மிஞ்சவில்லை. தேனாம்பேட்டையில் உள்ள பாலசுப்பிரமணியம் திருக்கோவிலில் முழங்கால் அளவிற்கு மழை நீர் புகுந்துள்ளது.
வெள்ளிக்கிழமை என்றாலே கோவில்களுக்கு செல்வது மக்களின் வழக்கம். இந்நிலையில் கோவிலுக்குள் முழங்கால் அளவிற்கு புகுந்த மழை நீரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சிலர் இறைவனை வழிபட்டு செல்கின்றனர்.
பொதுவாக கோயிலுக்கு வருவது குறைகளை சொல்வதற்கு ஆனால் கோவிலுக்குள்ளே நீர் சூழ்ந்து இவ்வளவு குறைகள் உள்ளது என்பதை யாரிடம் சொல்வது என தெரியவில்லை. கோவிலுக்குள் சூழ்ந்துள்ள மழைநீரை விரைந்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் தெரிவித்தனர்.

அதிக கூட்டம் காணப்படும் இந்த கோவிலை சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளதால் கோவிலுக்கு உள்ளும் மழைநீர் புகுந்து உள்ளது. அதிகாரிகளிடமும் கோவில் நிர்வாகத்திடமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பகுதியில் உள்ள நீரை அகற்றினால் மட்டுமே கோவிலுக்குள் உள்ள நீரை அகற்ற முடியும் என தெரிவித்துள்ளனர். இந்த மழை நீர் வடிய மேலும் ஒரு நாள் ஆகலாம் என நிர்வாகத் தரப்பில் கூறியுள்ளனர். விரைந்து நடவடிக்கை எடுத்தால் சிரமமின்றி பூஜைகளும், பக்தர்கள் வருகையும் இருக்கும் என அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications