தமிழகத்தில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும், நாளையும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது
தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களிலும், வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

29ம் தேதி முதல் 31ம் தேதி வரை கோவை நீலகிரி மற்றும் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications