வீட்டு லோன் இஎம்ஐ குறையப்போகிறது! ஆர்பிஐ எடுக்கும் முடிவு.. சரியும் ரெப்போ ரேட்.. வருது பெரிய செய்தி
சென்னை: இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நிதிக் கொள்கைக் குழு, செப்டம்பர் மாதத்தில் வட்டி விகிதங்களை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்க வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
பணவீக்கம் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. இதையடுத்து இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முந்தைய தவறுகளைத் தவிர்ப்பதற்கும், 2026 மற்றும் 2027 நிதியாண்டுகளுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) பணவீக்கத்தை 4 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு செல்வதற்கும், முயற்சிக்கும். இதற்கு வட்டி விகிதங்களை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைப்பதே சிறந்த வழி என்று இந்திய ஸ்டேட் வங்கியின் அறிக்கை கூறி உள்ளது.

ரெப்போ விகிதம்
செப்டம்பர் மாதத்தில் 25 அடிப்படைப் புள்ளிகள் (BPS) ரெப்போ விகிதக் குறைப்பு செய்யப்படுவது ரிசர்வ் வங்கிக்குச் சிறந்த வழி என SBI அறிக்கை பரிந்துரைக்கிறது. இதனால், செப்டம்பர் மாத நாணய கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி 25 BPS ரெப்போ விகிதக் குறைப்பை அறிவிக்கலாம். 2025 ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெற்ற முந்தைய கூட்டத்தில், ரெப்போ விகிதம் 6.25 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக 25 BPS குறைக்கப்பட்டது.
அடுத்த நிதிக் கொள்கைக் கூட்டம் செப்டம்பர் 29 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெற உள்ளது. இதற்கான கொள்கை அறிவிப்பு அக்டோபர் 1, 2025 அன்று வெளியிடப்படும். பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாலும், மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்பாலும், வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு வலுவான காரணங்கள் உள்ளன என SBI அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
SBI அறிக்கை
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நான்காவது முறையாக வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மூன்று முறை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்ட நிலையில், சிறிது கால இடைவெளிக்குப் பிறகு இந்த நான்காவது குறைப்பு இருக்கலாம் எனத் தெரிகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, பல்வேறு வங்கிகளும் தங்கள் கடன் வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கியுள்ளன. இதனால், வீட்டுக் கடன் மற்றும் சிறு வணிகக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ)
ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித மாற்றத்தின் தாக்கமாக, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற முன்னணி வங்கிகள் தங்கள் ரெப்போ இணைப்பு கடன் வட்டி விகிதத்தை (RLLR) 50 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளன. இந்த முன்னெடுப்பு வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கும், சிறு வணிகர்களுக்கும் லாபகரமாக அமையும்.
பேங்க் ஆஃப் பரோடாவின் திருத்தப்பட்ட RLLR 8.65%லிருந்து 8.15% ஆகக் குறைந்துள்ளது. அதேபோல், பஞ்சாப் நேஷனல் வங்கியின் RLLR 8.85%லிருந்து 8.35% ஆகக் குறைந்துள்ளது. பெரும்பாலான வங்கிக் கடன்கள் ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் போன்ற வெளிப்புற அளவுகோல்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால், இந்த வட்டி குறைப்புகள் நேரடியாகப் பயனாளிகளைச் சென்றடையும்.
ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம்
மறுபுறம், பஞ்சாப் நேஷனல் வங்கி தங்கள் கடன் வழங்குவதற்கான குறைந்தபட்ச செலவு விகிதத்தில் (MCLR) எந்த மாற்றங்களையும் செய்யவில்லை. கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட யு.சி.ஓ வங்கி, தங்கள் MCLR விகிதத்தை 10 அடிப்படைப் புள்ளிகள் குறைப்பதாக அறிவித்துள்ளது. இதன் திருத்தப்பட்ட MCLR தற்போது 8.15% முதல் 9.00% வரை உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, மைய வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 5.50 சதவீதமாக நிர்ணயித்தது. இதன் மூலமாக பிப்ரவரி மாதம் முதல் இதுவரை மொத்தமாக 100 அடிப்படைப் புள்ளிகள் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications