Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன இருந்தாலும் முன்னாள் முதல்வர் இல்லையா? ஓபிஎஸ்க்கு நேசக்கரம் நீட்டும் அப்பாவு? தனி அணி சமஉக்கள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்துடன் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்களுக்கு இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக சிக்கல் எழுந்துள்ளது. அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக சபாநாயகர் அப்பாவு முடிவெடுப்பார் எனவும் தகவல்கள் உலாவுகின்றன.

பல்வேறு விவகாரங்கள் அரசியல் சிக்கல்களுக்கு இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கும் என தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு அறிவித்திருக்கிறார்.

அக்டோபர் 17ஆம் தேதி காலை 10 மணிக்கு அவை கூடும் நிலையில் கூட்டத்தில் சமீபத்தில் காலமான முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்படும்.

சட்டமன்ற கூட்டத்தொடர்

சட்டமன்ற கூட்டத்தொடர்

அதன் பிறகு சட்டமன்ற அளவில் ஆய்வு குழு கூடி எத்தனை நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என்பது குறித்து விரிவாக முடிவு செய்யப்படும். இந்த நிலையில் அதிமுக விவகாரம் சட்டமன்ற கூட்டத் தொடரிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அதிமுகவின் பொருளாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதோடு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

சபாநாயகர் அப்பாவு

சபாநாயகர் அப்பாவு


இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவுக்கு எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு தரப்பினருமே மாறி மாறி கடிதங்களை அளித்துள்ளனர். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்ததோடு மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான ஆர்பி உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமித்துள்ளார்,. இது தொடர்பாக என்ன முடிவு எடுப்பார் சபாநாயகர் என்பதே அதிமுகவினரின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அதிமுக விவகாரம்

அதிமுக விவகாரம்

இந்த கேள்விகளுக்கெல்லாம் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சபாநாயகர் அப்பாவு விடை அளித்தார். அதில், எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருவருமே கடிதங்கள் அளித்திருக்கிறார்கள். இந்த கடிதங்கள் எனது பரிசீலனையில் இருக்கிறது. சபை மரபுப்படி அனைவருக்கும் இருக்கைகள் வழங்கப்படும். இருவருமே முன்னாள் முதல்வர்களாக இருந்திருக்கிறார்கள். எனவே அவர்கள் கண்ணியமாக நடந்து கொள்வார்கள் என நான் எதிர்பார்க்கிறேன். கொள்கை ரீதியாக அவர்களுக்குள் பிரச்சனை இருக்கிறது. அதை அவர்கள் தான் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். சட்டமன்ற மாண்புபடி என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ அது எடுக்கப்படும்" எனக் கூறியிருந்தார்.

விடை கிடைக்குமா?

விடை கிடைக்குமா?

இதனிடையே சட்டமன்ற கூட்டத்தொடரில் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் சமமான இருக்கைகளே ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இருவருமே தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில் தேர்தல் ஆணையத்தின் உரிய முடிவுக்கு பிறகு நடவடிக்கை எடுக்க சபாநாயகர் முடிவு செய்திருப்பதாகவும் அதுவரை ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் தனி அணியாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தை பொருத்தவரை அவர் தரப்பில் வைத்தியலிங்கம் உசிலம்பட்டி ஐயப்பன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் அதிருப்தி அதிமுகவாக செயல்படுவார்களா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இந்த விவகாரங்களுக்கு எல்லாம் அக்டோபர் 17ஆம் தேதி விடை கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+