Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பள்ளிக்கல்வித்துறை கொடுத்த முக்கிய அப்டேட்! பள்ளி மேலாண்மைக்குழு பதவிக்காலம் நீட்டிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளின் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசுத் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் ஆகிய அனைத்து வகைப் பள்ளிகளின் சீரான செயல்பாடுகளுக்குத் துணைபுரியும் வகையில், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல், ஜூலை மாதங்களில் திருத்தி அமைக்கப்பட்டன.

School Education Department Notification Extension of Tenure of All School Management Committees

இந்த அனைத்து வகைப் பள்ளிகளின் மேலாண்மைக்குழு உறுப்பினர்களுடைய பதவிக் காலம் 2024 ஏப்ரல், மே, ஜூலை மாதங்களில் முடிவடைய உள்ளன.

2024-2025 ஆம் கல்வியாண்டில் புதிதாகச் சேரும் மாணவர்களின் பெற்றோர்களையும் உள்ளடக்கிய புதிய பள்ளி மேலாண்மைக் குழுக்களை அமைக்கும் பொருட்டு, 2022-2024 ஆம் ஆண்டிற்கான தொடக்கப் பள்ளிகளுக்கான மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் 1-5-2020 முதல் 10-8-2024 வரையும், நடுநிலைப் பள்ளிகளுக்கான மேலாண்மைக்கு உறுப்பினர்களின் பதவிக் காலம் 24-4-2024 முதல்
20-7-2024 வரையும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் 10-7-2024 முதல்17-8-2024 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும், இதற்குரிய அரசாணை 29-2-2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது என்றும் பள்ளிக் கல்வித்துறை அரசுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அரசுப் பள்ளிகளில் நேற்று முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட அனைவரும் இணைந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் 5 வயதை பூர்த்தி செய்த குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகப்படுத்தி வருகிறார். இந்தாண்டு பட்ஜெட்டில் கூட பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் இல்லாத வகையில் முதலமைச்சர் ஸ்டாலின்ரூ.44,042 கோடி ஒதுக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே முதற்கட்டமாக விரைவில் 80,000 ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+