ஐய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல தமிழகத்தில் இருந்து ஜன.16 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை: சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தில் இருந்து தினமும் 64 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 16 ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதி நவீன சொகுசு பேருந்துகள் சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன.
கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 1 ஆம் தேதி முதல் தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐய்யப்பன் ஆலயத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, தமிழகத்திலிருந்து ஐய்யப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பம்பைக்கு சிறப்பு பேருந்துகள்
இந்த வருடம் கேரளாவிற்கு இயக்குவதற்கு 64 சிறப்புப் பேருந்துகளுக்கு உரிமம் பெறப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 16 ஆம் தேதி வரைக்கும், சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதி நவீன சொகுசு பேருந்துகள் சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன.

கூடுதல் பேருந்துகள்
மேலும் பக்தர்களின் வசதிக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும், 30 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு www.tnstc.in, உள்ளிட்ட தனியார் பேருந்து முன்பதிவு செயலிகள் மூலம் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் முன்பதிவு
30 நாட்களுக்கு முன்னதாக சிறப்பு பஸ்களுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம். www.tnstc.in, www.redbus.in, www.busindia.com, www.paytm.com, www.makemytrip.com, www.goibgo.com ஆகிய வலைதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
Recommended Video

விபரங்கள் அறிய செல்போன்
மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 9445014412, 9445014450, 9445014424, 9445014463, மற்றும் 9445014416 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் எனவும் தமிழ்நாடு அசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.பக்தர்களின் வருகைக்கு ஏற்ப இந்த பஸ்கள் இயக்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications