இனி பெங்களூர் போகலாம் ஜாலியா! சென்னைக்கு சீறிப் பாயும் வந்தே பாரத்! விமானம் போன்று இவ்வளவு வசதிகளா?
சென்னை : சென்னையில் இருந்து மைசூருக்கு காட்பாடி, பெங்களூர் வழியாக வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் நிலையில் அந்த ரயிலில் விமானம் போன்று பல வசதிகள் இருக்கின்றன. ஏன் அதை விட அதிக வசதிகள் இருக்கின்றன. அது என்னென்ன? வந்தே பாரத் சிறப்புகள் என்னென்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பையை இணைக்கும் வகையில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
பார்ப்பதற்கு அச்சு அசலாக புல்லட் ரயில் போலவே இருக்கும் வந்தே பாரத் ரயில்கள் 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 50 வினாடிகளுக்குள் எட்டும் என்பதும் 180 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வந்தே பாரத் ரயில்
இன்று பெங்களூருவில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு மைசூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைக்கிறார் இந்த திட்டம் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு இடையே சென்னை சென்ட்ரல் மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிநவீன வசதிகள்
வந்தே பாரத் ரயிலை இந்தியா முழுவதும் பேசுவதற்கு என்ன காரணம் என்றால் அதில் இருக்கும் வசதிகள் தான். விமானத்திற்கு இணையான பல வசதிகள் ஏன் அதைவிட சில வசதிகள் கூடுதலாகவே வந்தே பாரத் ரயிலில் இருக்கிறது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரயில்களான இது பெருநகரங்களை குறைந்த நேர கால இடைவெளியில் இணைக்கும் திறன் கொண்டவை. அது மட்டுமல்லாமல் இந்த ரயில் என்ஜின் ஆனது மற்ற ரயில்களைப் போல் அல்லாமல் ரயிலுடன் இணைந்து இருக்கும்.

என்னென்ன சிறப்புகள்
ரயில் முழுக்க மெட்ரோ ரயில்களில் இருப்பது போல தானியங்கி கதவுகள், முழுக்க முழுக்க 24 மணி நேரமும் ஏசி வசதி, அதிவேக இணைய வசதி என பல வசதிகள் உள்ளது. ஒவ்வொரு கம்போர்ட்மெண்டிலும் 32 இன்ச் எல்இடி டிவி, ரயில் எங்கு செல்கிறது என்பதை கண்காணிக்கும் ஜிபிஎஸ் வசதி. ஆடியோ வீடியோ தகவல் வசதிகள். மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பயோ கழிவறைகள் என பல நவீன வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கட்டணம் எவ்வளவு
இது மட்டுமல்லாமல் 360 டிகிரி கோணத்திலும் சுழலும் வகையில் எக்ஸிக்யூட்டிவ் சேர் வசதியும் வந்தே பாரத் ரயிலில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக நீண்ட தூர பயணம் கூட எந்தவித அலுப்பும் இல்லாமல் பயணிகள் பயணத்தை ரசிக்கலாம். இதில் அதி நவீன சஸ்பென்ஷன் வசதியும் இருப்பதால் சீட்டில் கிளாஸை வைத்தால் அதிலிருந்து தண்ணீர் சிந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வளவு வசதிகளில் இருந்தும் இந்த ரயிலின் கட்டணம் 300ல் இருந்து 1900 ரூபாய்க்குள் தூரத்தை பொருத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications