ஓமிக்ரான் வைரஸ் அறிகுறிகள் என்னென்ன? தென்னாப்பிரிக்கா மருத்துவர்கள் அட்வைஸ்
ஓமிக்ரான் வைரஸ் விரைவாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மை உடையது. இந்த வைரஸ் தாக்கியவர்களுக்கு என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்று பார்க்கலாம்.
சென்னை: புதிதாகப் பரவி வரும் வீரியமிக்க வைரஸ் ஓமிக்ரான் , ஏற்கெனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களை குறிவைத்து தாக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓமிக்ரான் வைரஸ் தாக்கியவர்களுக்கு சோர்வு, லேசான தசை வலி, தொண்டை அரிப்பு, வறட்டு இருமல் மற்றும் லேசான காய்ச்சல் அறிகுறிகள் தென்படும் என தென்னாப்பிரிக்க மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Recommended Video
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ள பி.1.1.529 என்ற வகை கொரோனா தற்போது குறைந்தது 17 நாடுகளில் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. இது மிகவும் கவலையளிக்கும் கொரோனா வைரஸ் (Variant of Concern) என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.

ஓமிக்ரான் வைரஸ் விரைவாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மை உடையது என்றும் தடுப்பூசிகள் இந்த வைரஸுக்கு எதிராக குறைந்த அளவே செயலாற்றுவதாகவும் கூறப்படுகிறது. இந்த வைரஸின் காரணமாக உலக நாடுகள் பலவும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளன. கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட 12 நாடுகளில் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அதனையடுத்து, இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவி விடாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றன.
தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஏஞ்சலிக் கோட்ஸி, ஒமிக்ரான் வைரஸ் புதிய அறிகுறிகளை உருவாக்குவதாக தெரிவித்துள்ளார். ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பின் சில அறிகுறிகளில் சோர்வு, லேசான தசை வலி, தொண்டை அரிப்பு, வறட்டு இருமல் மற்றும் லேசான காய்ச்சல் ஏற்படும் என்று கூறியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஒரு சில நாட்களுக்குள் குணமடைந்து விடுவர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியதில்லை. கடுமையான நோய் வராது என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் இப்போதைக்கு, தடுப்பூசி போடாத நோயாளிகளுக்கு கூட லேசான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு குறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா, 'இந்தியாவில் இதுவரை ஓமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. ஓமிக்ரான் வைரசை எதிர்த்துப் போராட அனைத்து நிலைகளிலும் தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவிற்குள் ஊடுருவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஓமிக்ரான் வைரஸ் பரவியுள்ள 12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா 3வது தவணை தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்துவது தொடர்பாகவும் மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications