நலம் வளம் பெருகட்டும், மகிழ்ச்சி மன நிம்மதி நிலவட்டும் - தலைவர்கள் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
ஞானமே வடிவான திருமேனியைக் கொண்ட விநாயகப் பெருமானின் திருவருளால் உலகமெங்கும் அன்பும் அமைதியும் நிலவட்டும். நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும், வீடெங்கும் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் நிலவட்டும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் வா
சென்னை: வினை தீர்க்கும் தெய்வமாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளில் பக்தியுடனும், மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்த விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் தெரிவித்துள்ளனர். விநாயகப் பெருமானின் திருவருளால் உலகமெங்கும் அன்பும் அமைதியும் நிலவட்டும். நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும், வீடெங்கும் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் நிலவட்டும் என்றும் வாழ்த்தியுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி திருவிழா, நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வீடுகளில் பொதுமக்கள், விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "வினை தீர்க்கும் தெய்வமாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளில் பக்தியுடனும், மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்த விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மக்கள் நற்காரியங்களை தொடங்கும்போது தங்குதடையின்றி சிறப்புடன் நடைபெற விநாயகப் பெருமானை முதலில் போற்றி வணங்குவர் . விநாயகரை துதித்து நற்காரியங்களை மேற்கொண்டால் வெற்றி விளையும் என்பது மக்களின் ஏகோபித்த நம்பிக்கையாகும்.
முழுமுதற் கடவுளாம் விநாயகப் பெருமானின் அவதார திருநாளாம் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாருக்கு எருக்கம்பூ மாலை அணிவித்து, அவருக்கு பிடித்தமான சுண்டல், கொழுக்கட்டை, அப்பம், அவல், பொரி, கரும்பு போன்ற பொருட்களைப் படைத்து, அருகம்புல், செம்பருத்தி, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்து விநாயகப் பெருமானை மக்கள் பக்தியுடன் வழிபடுவார்கள்.
ஞானமே வடிவான திருமேனியைக் கொண்ட விநாயகப் பெருமானின் திருவருளால் உலகமெங்கும் அன்பும் அமைதியும் நிலவட்டும். நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும், வீடெங்கும் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் நிலவட்டும் என்று வாழ்த்தி விநாயகர் சதுர்த்தி திருநாளில் விமர்சையாக கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா ஆகியோரது வழியில் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை அன்போடு உரித்தாக்கிக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

டிடிவி தினகரன் வாழ்த்து
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது வாழ்த்துச்செய்தியில்,முழுமுதற் கடவுளான விநாயகப்பெருமான் அவதரித்த நாளை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடும் அனைவருக்கும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஒரு நல்ல செயலையும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவது வழக்கம். அந்தளவுக்கு எளிய மக்களின் கடவுளாக, நினைத்ததைப் பிடித்து வைத்து வழிபடக்கூடியவராக, விருப்பப்பட்டபடி எல்லாம் பெயர் வைத்து கொண்டாடப்படுபவராக இருப்பது விநாயகரின் தனிச்சிறப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
மனவளம், உடல்நலம்,சொல்வளம், பொருளாதார மேன்மை என நல்வாழ்வுக்குத் தேவையான அனைத்தும் விநாயகரை வழிபட்டால், கிடைக்கும் என்று தமிழ் மூதாட்டி அவ்வையார் பாடியிருக்கிறார். அவரது வாக்கினைப் போலவே இந்த நன்னாளில் விநாயகரின் அருளால் அனைவருக்கும் துன்பங்கள் அகன்று, வளமும் நலமும் பெருகட்டும். அமைதியும் அன்பும் உலகில் தழைத்தோங்கட்டும் என மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications