வேட்புமனு தாக்கல் செய்ய கூட்டமாக வரவேண்டாம்... சனி ஞாயிறு லீவு - சத்யபிரதா சாகு
சென்னை: வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் வர 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். மார்ச் 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது என்றும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்பு மனுத்தாக்கல் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 12ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை, தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தலை நடத்துவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் 24 மணி நேரமும் அழைக்கலாம் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மார்ச் 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்பு மனுத்தாக்கல் கிடையாது என்று தெரிவித்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் வர 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அனைத்து தொலைபேசி அழைப்புகளும் பதிவு செய்யப்பட்டு அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.
தமிழக சட்டசபைத் தேர்தல் பணிகளில் மொத்தம் 4,79,892 தேர்தல் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்காக 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 76 மையங்களில் எண்ணப்படும். தேர்தல் முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை 76 அரங்குகளில் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 50% வாக்குச்சாவடிகள் இணையதளம் மூலம் ஒளிபரப்பப்படும்
வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆணையம் கூறும் இதர 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம். கொரோனா நோயாளிகள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும். வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்படும் என கூறினார்.
-
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர்












Click it and Unblock the Notifications