வேட்புமனு தாக்கல் செய்ய கூட்டமாக வரவேண்டாம்... சனி ஞாயிறு லீவு - சத்யபிரதா சாகு
சென்னை: வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் வர 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். மார்ச் 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது என்றும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்பு மனுத்தாக்கல் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 12ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை, தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தலை நடத்துவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் 24 மணி நேரமும் அழைக்கலாம் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மார்ச் 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்பு மனுத்தாக்கல் கிடையாது என்று தெரிவித்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் வர 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அனைத்து தொலைபேசி அழைப்புகளும் பதிவு செய்யப்பட்டு அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.
தமிழக சட்டசபைத் தேர்தல் பணிகளில் மொத்தம் 4,79,892 தேர்தல் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்காக 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 76 மையங்களில் எண்ணப்படும். தேர்தல் முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை 76 அரங்குகளில் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 50% வாக்குச்சாவடிகள் இணையதளம் மூலம் ஒளிபரப்பப்படும்
வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆணையம் கூறும் இதர 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம். கொரோனா நோயாளிகள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும். வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்படும் என கூறினார்.
-
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications