திமுக Vs அதிமுக.. கோட்டையில் கொடி நாட்டப் போவது யார்? தென் மாவட்டங்களில் யாருக்கு செல்வாக்கு?
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற இருக்கும் நிலையில் ஆட்சி அமைக்கப் போவது யார்? என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக ஆட்சி அமைக்க உதவும் தென் மாவட்டங்களில் பெருவாரியான தொகுதிகளை வெல்பவர்கள் தான் ஆட்சி அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் யாருக்கு அங்கு பலம்? எந்த கட்சி பலவீனமாக இருக்கிறது? என்பது குறித்து பார்க்கலாம்..
கடந்த சில தேர்தல்களைப் போலவே இந்த முறையும் தென் மாவட்டங்களில் யாருக்கு பலம்? எந்த கட்சி பலவீனமாக இருக்கிறது? வாக்கு வங்கி அரசியலே முக்கியமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக முக்குலத்தோர், நாடார் மற்றும் பட்டியலினத்தோர் சமூகங்களின் வாக்குகள் எந்தக் கட்சிக்குச் செல்கின்றன என்பதே பல தொகுதிகளில் வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன.

இதனால் தான் திமுக, அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் இந்த வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் தென் மாவட்டங்கள் அதிமுகவின் வலுவான கோட்டையாக இருந்தது.
ஆனால் அதன் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், கட்சிக்குள் ஏற்பட்ட பிரிவினைகள் போன்ற காரணங்களால் அந்த ஆதரவு மெதுவாக குறைந்தது. இதை பயன்படுத்திக் கொண்ட திமுக கடந்த தேர்தலில் பல இடங்களில் முன்னிலை பெற்றது. இந்த முறை அதிமுக தரப்பில் கூட்டணி கணக்குகள் சிக்கலான நிலையில் இருந்தாலும், சில முக்கிய மாற்றங்கள் நடந்துள்ளன. குறிப்பாக தினகரன் மீண்டும் கூட்டணிக்குள் வந்தது ஒரு முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தனித்தனி நடவடிக்கைகள் அதிமுக வாக்கு வங்கியை பாதிக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.
சில இடங்களில் வாக்கு பிளவு ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மற்றொரு பக்கம் திமுகவும் அமைதியாக இருக்கவில்லை. சமூக அடிப்படையிலான வாக்கு வங்கிகளை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை களத்தில் இறக்கியுள்ளது. குறிப்பாக சமூக தலைவர்களை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வது, கூட்டணியை விரிவுபடுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் நெருக்கடியான தொகுதிகளிலும் வெற்றி பெற திட்டமிடப்பட்டுள்ளது.
இதே நேரத்தில், இந்த தேர்தலில் புதிய காரணி எனக் கருதப்படுவது நடிகர் விஜயின் அரசியல் வருகை. அவர் தொடங்கியுள்ள கட்சி நேரடியாக பல தொகுதிகளில் போட்டியிடுவதால், பாரம்பரிய வாக்கு கணக்குகள் மாற்றமடையும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களிடம் இவரின் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது.
மொத்தத்தில் பார்க்கும்போது, தென் மாவட்டங்களில் யார் மேலாதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதே தமிழகத்தில் அடுத்த அரசு யார் அமைப்பார்கள் என்பதை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும். வாக்கு பிளவு, கூட்டணி மாற்றங்கள், சமூக அரசியல் கணக்குகள் என பல்வேறு அம்சங்கள் கலந்து இந்த முறை தேர்தல் முடிவை கணிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.
வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று நேரத்தில் முன்னிலை நிலவரங்கள் தெரிய வந்துவிடும். தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளை அள்ளுபவர்கள் தான். இந்த தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டப் போகிறார்கள்.












Click it and Unblock the Notifications