பாவயாத்திரையா? முதல்வர் ராமேஸ்வரம் சென்று பரிகாரம் தேடட்டும்.. பாய்ந்து வந்த அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மக்களை வஞ்சித்து திமுக ஏராளமான பாவங்களை செய்துள்ளது. இதற்காக முதல்வர் மு.க ஸ்டாலின் ராமேஸ்வரத்திற்கு பாவ யாத்திரை சென்று கடலில் நீராடி சிவனை வேண்டி பரிகாரம் தேடட்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணத்தை தொடங்கியிருக்கிறார். அண்ணாமலையின் இந்த பாத யாத்திரையை ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தொடங்கி வைத்தார். பாதயாத்திரை துவக்க விழாவில் பேசிய அமித்ஷா தமிழகத்தில் ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

Tamil Nadu CM M. K. Stalin criticizes BJPs padayatra as a sin yatra, Annamalai says this

அமித்ஷாவின் விமர்சனத்திற்கு இன்று பதிலடி கொடுத்த முதல்வர் மு.க ஸ்டாலின், அமித்ஷா தொடங்கி வைத்தது பாத யாத்திரை இல்லை என்றும் பாவ யாத்திரை எனவும் 2002 இல் நடந்த குஜராத் கலவரம், தற்போது நடந்த மணிப்பூர் வன்முறைக்கு பாவ மன்னிப்பு கேட்கும் யாத்திரைதான் அது" என்று சூடாக பதிலடி கொடுத்தார். இந்த நிலையில், பாவயாத்திரை என விமர்சித்த முதல்வருக்கு பதிலளிக்கும் வகையில் அண்ணாமலை காட்டமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்த என் மண் என் மக்கள் நடைபயணம், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை பாவயாத்திரை என்று புலம்பும் அளவுக்கு வெகுவாகக் கலங்கடித்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாத நிலையில், ஊழல் அமைச்சர்களை காப்பாற்றுவதிலும், திமுக முதல் குடும்பத்தின் 'நிதி'களைப் பெருக்குவதிலும் மட்டுமே ஊழல் திமுக அரசு இன்று கவனம் செலுத்துகிறது. தமிழகத்தில் ஒரு குடும்பம் தாங்கள் செய்த எண்ணற்ற பாவங்களை போக்கிக் கொள்ள புனித நீரில் மூழ்க வேண்டும் என்றால் அது திமுகவின் முதல் குடும்பமாக மட்டுமே இருக்க முடியும்.

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள், கச்சத்தீவை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியதால், கடலில் இருக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டது. மத்தியில் 10 ஆண்டுகால திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர், திமுகவினர் இவற்றைப் பார்த்து வாய்மூடி மௌனப் பார்வையாளர்களாகவே இருந்தனர்.

மீனவர்களின் உயிர்களை விட, வளமான அமைச்சரவைப் பதவிகள் அவர்களுக்கு முக்கியமாக இருந்தன. 2009 ஆம் ஆண்டில், இலங்கையில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் சகோதர சகோதரிகள் கொல்லப்பட்டபோது, அவர்களுக்கு உதவுவது போல் நடிப்பதில் மட்டும்தான், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது தந்தையுடன் மும்முரமாக இருந்தார்.

பாவமன்னிப்பு கேட்கும் அளவுக்கு எத்தனையோ பாவங்கள் செய்திருக்கும் நிலையில், தன் குடும்பம் சொத்து குவிப்பதற்காக, தமிழ் மக்களின் நலனை அடகு வைக்கும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், பாவயாத்திரை செய்து, ராமேஸ்வரத்தில் புனித நீராடி, எம்பெருமான் சிவனிடம் மன்னிப்பு கேட்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அண்ணாமலை தனது ட்வீட் பதிவில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+