சீட் தரேன்.. யாராவது இருக்கீங்களா? தேடி தேடி ஆள் பிடிக்கும் ராமதாஸ்.. இப்படி ஒரு மோசமான நிலையா?
சென்னை: சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணி வைத்ததை அவருக்கு ஆதரவாக நின்ற பெரும்பாலானவர்கள் விரும்பவில்லையாம். இதனால் சமீபத்தில் தம்மை ஆதரிக்கும் பாமகவினரிடம் நேர்காணல் நடத்தியிருந்தார் ராமதாஸ்.
அவர்களில் தொகுதிக்கு இருவரை தேர்வு செய்து தனித்தனியாக, "உங்களுக்கு சீட் ஒதுக்கலாம்னு இருக்கேன். எவ்வளவு செலவு செய்ய முடியும்? " என்று நேற்று கேட்டுள்ளார். இருவரும் ஒரே மாதிரி, "செலவு செய்ய பணம் இல்லை. எனக்கு சீட் வேண்டாம் அய்யா" என்று மறுத்து பேசி விட்டனர்.

ராமதாஸ் வியப்பு
யாருமே போட்டிப் போட விரும்பவில்லை. இதனால் ஏகத்துக்கும் அப் - செட்டாகியிருக்கிறார் ராமதாஸ். ஜி.கே. மணி, அருள் ஆகிய சிட்டிங் எம்.எல்.ஏ.க்களே, போட்டியிட ஆர்வம் காட்டாதது ராமதாஸை மிகவும் நொந்து போக வைத்துள்ளதாம். இந்த நிலையில், தங்களின் அரசியல் எதிர்காலம் குறித்து மணியும் அருளும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இது ஒரு புறமிருக்க, சசிகலாவுடன் ஏற்படுத்தப்பட்ட கூட்டணியை விரும்பாத நிர்வாகிகள், மீண்டும் அன்புமணி தரப்பிடமே சென்று விடலாமா? என யோசித்து வருவதாகவும் பாமக தரப்பில் எதிரொலிக்கிறது.
விழுப்புரம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன், அஇபுதமமுக பொதுச் செயலாளர் சசிகலா சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், சசிகலாவின் அஇபுதமமுக, ராமதாஸ் தரப்பு பாமகவுடன் இணைந்து தமிழகம், புதுச்சேரி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
துரோகிகளை வீழ்த்த வேண்டும் என்கிற ஒற்றைப் புள்ளியில் இவர்கள் இருவரையும் இணைத்துள்ளது என்கிறார்கள். ராமதாஸ்-சசிகலா சந்திப்பில், தேர்தல் செலவுகளுக்கு எம்மிடம் பணம் இல்லை என்கிற புலம்பல் பாட்டை ராமதாஸ் பாடியிருக்கி றார். அதனை நான் பார்த்துக்கொள்கிறேன்; கவலைப்படாதீர்கள் என்று நம்பிக்கைக் கொடுத்துள்ளார் சசிகலா.
234 தொகுதிகளிலும் போட்டி
234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று சொல்லப்பட்டாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் போட்டியிடலாம் என்றும் ராமதாசுக்கு சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம், 134 தொகுதிகளில் பாமகவும், 100 தொகுதிகளில் சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியும் போட்டியிடலாம் என சசிகலா சொல்லியிருக்கிறார். அதனால்தான் 134 தொகுதிகளில் போட்டியிட தங்கள் தரப்பில் ஆட்கள் இருக்கிறார்களா? என ஆராய்ந்துள்ளது தைலாபுரம் தோட்டம்.
வடக்கு மற்றும் மேற்கு தமிழகத்தில் மட்டுமே போட்டியிடுவதாக இருந்தால் 134 தொகுதிகளுக்கு ஆட்களை நிறுத்தி விட முடியும். ஆனால், தமிழகம் முழுவதும் தானே தொகுதிகளை பரவலாக பகிர்ந்து கொள்ள முடியும். அப்படியிருக்கையில் தென் தமிழகத்தில் நமக்கு ஆட்களே இல்லையே ? அதனால் தென் மாவட்டங்களில் வேட்பாளர்களுக்கு எங்கே போவது ? என ஜி.கே.மணியிடம் ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் போட்டி
இதனையடுத்துத்தான் குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் போட்டியிடலாம் என்கிற பேச்சு தைலாபுரம் தோட்டத்தில் எழுந்துள்ளது. இது குறித்து சசிகலாவிடம் ராமதாஸ் விவாதித்திருக்கிறார். அப்போது, தென் மாவட்டங்களில் எந்தெந்த தொகுதிகளுக்கு உங்களிடத்தில் ஆட்கள் இல்லையோ அங்கு எங்கள் சார்பில் சிலரை அறிமுகம் செய்கிறோம் . அவர்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல, வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் எங்களுக்கு வேட்பாளர்கள் இல்லாத போது உங்களிடம் இருந்தால் அவர்களை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம் என ஒரு வித்தியாசமான டீலிங் பேசப்பாடிருக்கிறது.
ஆக, ராமதாஸ்-சசிகலா கூட்டணி உருவாகி விட்டாலும், வேட்பாளர்கள் பஞ்சம் அவர்களின் இருவர் தரப்பிலும் உருவாகியிருக்கிறது.
- சிறப்பு நிருபர் எழில்
-
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
சினிமாவில் சிகரெட் தடை டூ ‘மாற்றம் முன்னேற்றம்’ வரை - 2016இல் அன்புமணி செய்த கார்ப்பரேட் பிரச்சாரம் -
“மாம்பழத்தை ஜூஸ் ஆக்கிவிடாதீர்கள்..” பாமக வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து! -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications