Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Udayachandran IAS: தமிழக நிதித் துறை செயலாளர் உதயசந்திரன் அப்பல்லோவில் அட்மிட்! எப்படி இருக்கிறார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக நிதித் துறை செயலாளர் உதயசந்திரன் ஐஏஎஸ்ஸுக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து ஸ்டன்ட் கருவி பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமாக இருக்கிறார். அவரது உடல்நிலையும் சீராக இருப்பதாக அப்பல்லோ மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மூத்த ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பவர் உதயசந்திரன். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இவர் இளம் வயதிலேயே யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார். இதையடுத்து இவர் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராகவும் பல்வேறு பிரிவுகளின் செயலாளராகவும், ஆணையராகவும் இருந்துள்ளார்.

udhayachandran tamil nadu

எந்த துறையில் இருந்தாலும் அதில் ஒரு புரட்சி செய்துவிடுவது இவருடைய வழக்கம். மிகவும் நேர்மையான அதிகாரி. இவர் தருமபுரி ஆட்சியராக இருந்த போது பதற்றமான இரு கிராமங்களில் எந்த பிசிறும் தட்டாமல் தேர்தலை முடித்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குட்வில் புக்கில் இடம் பெற்றிருந்தார்.

அது போல் டிஎன்பிஎஸ்சி செயலாளராக இவர் இருந்த போது, ஓஎம்ஆர் ஷீட் எனும் நடைமுறையை கொண்டு வந்தார். அது போல் ஒரு முறை பதிவு செய்யும் முறையையும் வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வந்தார்.

பின்னர் கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை செயலாளராக இருந்த போது இவர், 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் என்ற பட்டியல் வெளியிடுவதை நிறுத்தினார். இது மற்ற குழந்தைகளுக்கு மன உளைச்சலை தரும் என்பதால்!

மேலும் பிளஸ் 2 தேர்வில் 1200 மதிப்பெண்களுக்கு பொதுத் தேர்வு என இருந்த நிலையில் பிளஸ் 1 தேர்வையும் பொதுத் தேர்வாக்கி, அதில் 600 மதிப்பெண்கள், 12 ஆம் வகுப்பு தேர்வில் 600 மதிப்பெண்கள் என்பதை கொண்டு வந்தார். டிஆர்பி தேர்வில் நடந்த பிரச்சினையை உதயசந்திரன் கண்டுபிடித்ததால் அவரது இலாகா மாற்றப்பட்டதாக சொல்லப்பட்டது. இதையடுத்து #We Support Udhayachandran என்ற ஹேஷ்டேக் பிரபலமானது.

இதைத் தொடர்ந்து அவர் தமிழ் மொழி மற்றும் தொல்லியல் துறை செயலாளராக இருந்தார். அப்போதும் அவர் தனது திறமையை காட்டினார். தமிழ் இலக்கியங்களை டிஜிட்டல் முறைக்கு கொண்டு வந்தார். கீழடி அகழ்வாய்வு குறித்தும் சில நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வரின் தனிச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். சிறப்பு திட்டத்தின் செயலாளராகவும் இருந்தார். பின்னர் இவர் நிதித் துறை செயலாளராக மாற்றப்பட்டார். திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பணத்தை ஒதுக்கும் முக்கிய துறை இது!

இந்த நிலையில் கடந்த வாரம் உதயசந்திரனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் அவரது இதயத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் கடந்த 26ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய அடைப்பை நீக்கும் வகையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஸ்டென்ட் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்டென்ட் வைத்த பிறகு, உதயசந்திரன் நலமாக இருக்கிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார், சில நாட்களுக்கு வீட்டில் முழு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+