குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 தர மாட்டார்கள்.. ஏன் தெரியுமா? "பாயிண்ட்டாக" பேசும் மாஜி அமைச்சர்
சென்னை: பொங்கலுக்கு ரேஷன் கடைகளில் தலா 2500 ரூபாய் தர முடியாத தமிழக அரசு, குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் எப்படி வழங்கும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் முன்னாள் அமைச்சரும் அதிமுக சீனியர் தலைவருமான ஜெயக்குமார்.
பொங்கல் திருநாளுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
இதன்படி, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொருட்கள் விவரம்
பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவை இந்த 20 பொருட்களாகும். ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் இது வழங்கப்படுகிறது.

ரொக்கப் பரிசு
இந்த அறிவிப்பின் போது, கடந்த பொங்கலுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வழங்கியது போல 2500 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கவில்லை என்று அதிமுக கேள்விக்கணைகளை தொடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில் இந்த கேள்வியை முன் வைத்திருந்தார்.

ஜெயக்குமார் கேள்வி
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "வருடத்திற்கு ஒரு முறை பொங்கலுக்கு வழங்கப்படும் பணம் கூட தர வழி தெரியாத இயலாமை அரசு மாதம் தோறும் மகளிருக்கு ரூ1000 எப்படி கொடுக்கும்??? விடியா அரசினால் மக்கள் படும் அவதி!!!" இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

திமுக தேர்தல் வாக்குறுதி
இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்பது திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சமாகும். பெண்கள் மத்தியில் இந்த அறிவிப்புக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. அரசு அமைந்தவுடன் இதுதொடர்பான அறிவிப்பு வருமா என்று பெண்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.

கேள்விகள்
இருப்பினும் அமைச்சர்கள் அவ்வப்போது இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று தங்கள் பேட்டியின்போது குறிப்பிடுகின்றனர். இந்த நிலையில்தான் வருடத்திற்கு ஒருமுறை பொங்கலுக்கு வழங்க பணம் இல்லாத நிலை இருக்கும்போது மாதம்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு எப்படி பணம் தர முடியும் என்ற கேள்வியை அதிமுக முன் வைத்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் பண உதவி என்ற திட்டம் செயல்பாட்டுக்கு வருமா, அல்லது அடுத்த பொதுத் தேர்தல் வரை இழுத்தடிக்கப்படுமா, என்ற கேள்விகளை ஜெயக்குமார் ட்விட்டர் பதிவு ஏற்படுத்தியிருக்கிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications