குழந்தைகளுக்கான மாநில கொள்கை.. வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாட்டில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழ்வதற்கும், அவர்களுக்கான உரிமையை பெறுவதற்கும் குழந்தைகளுக்கான மாநில கொள்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி, நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 1,148 குழந்தைகளுக்கு கருணை அடிப்படையில் நிதியுதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார்.

காணொலிக் காட்சி மூலம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட பணிகளை இன்று தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டில் பல்துறை சார்பாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

மரபணு தேடல் மென்பொருள்
இது மட்டுமின்றி, அறிவியல் துறை சார்பாக உருவாக்கப்பட்ட தடய மரபணு தேடல் மென்பொருளை (software) நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். மாநிலங்களுக்கு இடையே செயல்படும் குற்றவாளிகளின் தொடர்பை கண்டறிதல், கரையோரங்களில் ஒதுங்கும் அடையாளம் காண முடியாத உடல்கள் மற்றும் மனித எலும்புகளை மரபணு ஆய்வு மூலம் அடையாளம் காணலாம்.

குற்றவாளிகளை எளிதில் சிக்குவர்
தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிதல், இயற்கைப் பேரிடர்களால் உயிரிழந்த நபர்களை கண்டறிதல் போன்ற பணிகளை மிக எளிதாகவும் துரிதமாகவும் இந்த மரபணுதேடல் மென்பொருளில் கண்டறியலாம்.

கருணை அடிப்படையில் வேலை
மேலும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் கருணை அடிப்படையில் 15 பேருக்கு பணி நியமன ஆணையையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார். அதே சமயம், உள்துறை சார்பில் ரூ.44.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட காவலர் குடியிருப்புகள், நிலையங்கள், கட்டிடங்கள், உதவி சிறை அலுவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து காவலர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

குழந்தைகளுக்கான மாநிலக் கொள்கை
இதுமட்டுமின்றி, தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், உரிமையை பெறவும் குழந்தைகளுக்கான மாநில கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரகுபதி, ராஜ கண்ணப்பன், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications