டெல்லிக்கு சென்றாலே இடமாறுதலா?.. ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி!
சென்னை: டெல்லி சென்றாலே இடமாறுதலா என கேள்வி எழுப்பிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலுங்கானா ஆளுநராக உள்ள தமிழிசைக்கு அந்த மாநில முதல்வரான சந்திரசேகர ராவுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. தமிழிசையின் தாய் இறப்புக்குக் கூட தன்னிடம் கேசிஆர் துக்கம் விசாரிக்கவில்லை என மிகவும் வேதனையுடன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அண்மையில் டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் தமிழிசை சந்தித்து பேசியிருந்தார். இதையடுத்து தமிழிசையை பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆளுநர் தமிழிசை
இதுதொடர்பாக ஆளுநர் தமிழிசை அளித்த பேட்டியில் தன்னை விட திறமை உள்ளவராக போட வேண்டும் என்று சொல்லுகிறார்கள். நான் சவால் விடுகிறேன். பெண் என்றால் சாதிக்க முடியாதா? என்னை விட யார் திறமையாக செயல்பட முடியும். இரண்டு மாநில ஆளுநர் பணியை எந்த இடத்திலும் குறைவைத்தது இல்லை.

பாக்கியசாலி
நான் ஒரு பாக்கியசாலி. இத்தனை அன்பு எனக்கு கிடைத்துள்ளது. மக்களிடம் அதிகமாக செல்கிறார் என்பதால் சில நேரங்களில் பிரச்சினைகள் ஏற்படுகிறது. அரசியல்வாதியாக இருக்கும் போது விமர்சனம் வருகிறது. ஆளுநராக இருக்கும் போதும் விமர்சனம் வருகிறது. சும்மா டெல்லி சென்றால் அதற்குள் என்னை இடமாறுதல் செய்ய போவதாக சொல்கிறார்கள்.

தெலுங்கானாவில் ஆளுநர்
தெலுங்கானாவில் ஆளுநராக பணியாற்றுவது சாதாரண விஷயமல்ல. அங்கேயே பணி செய்துவிட்டேன். அதனால் எங்கு சென்றாலும் பணியை செய்வேன் என்றார். ஆளுநரின் தேநீர் விருந்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது தொடர்பாக தமிழிசை கூறுகையில் அழைப்பு வந்தால் மரியாதை கொடுங்கள்.

பெரியவர்களா தாழ்ந்தவர்களா
வேண்டாம் வர மாட்டேன் என்று கூறினால் பெரியவர்களா, அல்லது மதித்து வந்தால் அவர்கள் தாழ்ந்தவர்களா? ஆளுநரும் முதல்வரும் மனகசப்பு இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு புதுச்சேரி உதாரணம். முதல்வர், ஆளுநர் ஒன்றாக இல்லை என்றால் எப்படியிருக்கும் என்பதற்கு தெலுங்கானா ஒரு உதாரணம். அரசியல்வாதியாக இருந்தபோதும் விமர்சனம் வருவதாகவும், ஆளுநராக இருக்கும்போதும் விமர்சனம் வருவதாகவும் தமிழிசை தெரிவித்திருந்தார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications