டெல்லிக்கு சென்றாலே இடமாறுதலா?.. ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி!
சென்னை: டெல்லி சென்றாலே இடமாறுதலா என கேள்வி எழுப்பிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலுங்கானா ஆளுநராக உள்ள தமிழிசைக்கு அந்த மாநில முதல்வரான சந்திரசேகர ராவுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. தமிழிசையின் தாய் இறப்புக்குக் கூட தன்னிடம் கேசிஆர் துக்கம் விசாரிக்கவில்லை என மிகவும் வேதனையுடன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அண்மையில் டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் தமிழிசை சந்தித்து பேசியிருந்தார். இதையடுத்து தமிழிசையை பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆளுநர் தமிழிசை
இதுதொடர்பாக ஆளுநர் தமிழிசை அளித்த பேட்டியில் தன்னை விட திறமை உள்ளவராக போட வேண்டும் என்று சொல்லுகிறார்கள். நான் சவால் விடுகிறேன். பெண் என்றால் சாதிக்க முடியாதா? என்னை விட யார் திறமையாக செயல்பட முடியும். இரண்டு மாநில ஆளுநர் பணியை எந்த இடத்திலும் குறைவைத்தது இல்லை.

பாக்கியசாலி
நான் ஒரு பாக்கியசாலி. இத்தனை அன்பு எனக்கு கிடைத்துள்ளது. மக்களிடம் அதிகமாக செல்கிறார் என்பதால் சில நேரங்களில் பிரச்சினைகள் ஏற்படுகிறது. அரசியல்வாதியாக இருக்கும் போது விமர்சனம் வருகிறது. ஆளுநராக இருக்கும் போதும் விமர்சனம் வருகிறது. சும்மா டெல்லி சென்றால் அதற்குள் என்னை இடமாறுதல் செய்ய போவதாக சொல்கிறார்கள்.

தெலுங்கானாவில் ஆளுநர்
தெலுங்கானாவில் ஆளுநராக பணியாற்றுவது சாதாரண விஷயமல்ல. அங்கேயே பணி செய்துவிட்டேன். அதனால் எங்கு சென்றாலும் பணியை செய்வேன் என்றார். ஆளுநரின் தேநீர் விருந்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது தொடர்பாக தமிழிசை கூறுகையில் அழைப்பு வந்தால் மரியாதை கொடுங்கள்.

பெரியவர்களா தாழ்ந்தவர்களா
வேண்டாம் வர மாட்டேன் என்று கூறினால் பெரியவர்களா, அல்லது மதித்து வந்தால் அவர்கள் தாழ்ந்தவர்களா? ஆளுநரும் முதல்வரும் மனகசப்பு இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு புதுச்சேரி உதாரணம். முதல்வர், ஆளுநர் ஒன்றாக இல்லை என்றால் எப்படியிருக்கும் என்பதற்கு தெலுங்கானா ஒரு உதாரணம். அரசியல்வாதியாக இருந்தபோதும் விமர்சனம் வருவதாகவும், ஆளுநராக இருக்கும்போதும் விமர்சனம் வருவதாகவும் தமிழிசை தெரிவித்திருந்தார்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications