படையெடுக்கும் தமிழக காங்கிரஸ்.. நாளை ஆளுநர் மாளிகை நோக்கி கே.எஸ்.அழகிரி தலைமையில் பேரணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விலைவாசி உயர்வு, அக்னிபாத் திட்டம் உள்ளிட்டவற்றை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நாளை ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல உள்ளது.

கடந்த 2 வாரங்களுக்கு முன் தொடங்கிய மழைக்கால கூட்டத் தொடரில் ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நாடாளுமன்ற லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வந்தன.

பண வீக்கம், பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கவும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இது தொடர்பாக மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் போராட்டம் நடத்தியதால் நடவடிக்கைகள் முடங்கின.

சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

கடந்த 27 ஆம் தேதி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் லோக்சபா மற்றும் ராஜ்ய சபாவிலிருந்து நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது.

விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வு

இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரி எம்.பிக்கள் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், ஜிஎஸ்டி வரி உயர்வு உள்ளிட்டவை குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தன. அதன் தொடர்ச்சியாக லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார்.

நாடு தழுவிய போராட்டம்

நாடு தழுவிய போராட்டம்

நிர்மலா சீதாராமனின் விளக்கத்தை ஏற்க மறுத்து லோக்சபாவில் காங்கிரஸ் மற்றும் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தன. இதற்கிடையே காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை நேற்று நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு சீல் வைத்தது. டெல்லியில் உள்ள சோனியாவின் வீடு முன் போலீசார் குவிக்கப்பட்டன.

Recommended Video

    Congress கட்சி நாடு முழுவதும் போராட்டம் *India
    ஆளுநர் மாளிகை

    ஆளுநர் மாளிகை

    இந்த நிலையில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் லோக்சபா மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்கள் கூட்டம் நாடாளுமன்ற காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பெட்ரோல், டீசல், கேஸ் விலையேற்றம், வேலையின்மை, அக்னிபத் திட்டத்தை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்போவது காங்கிரஸ் அறிவித்தது. தமிழ்நாட்டில் நாளை காலை 10 மணியளவில் ராஜிவ் காந்தி சிலையிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல இருப்பதாக அறிவித்து உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+