ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி.. தமிழக அரசு அதிரடி! மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று அவசியம்
சென்னை: தமிழகத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் வீரர்கள் கொரோனா நெகட்டிவ் டெஸ்ட் ரிசல்டு வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு மிகவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
காளைகள் காட்சி பட்டியலில் சேர்க்கப்பட்டதால், ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு தடை விதித்தபோது, 2017ல் மொத்த தமிழகமும் கொந்தளித்து எழுந்து பெரும் போராட்டங்களை நடத்தியது.

நிபந்தனைகள்
இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்த அரசு உத்தரவிட்டது. முன்பைவிட எழுச்சியாக ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

பாரம்பரியம்
இது தொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ஜல்லிக்கட்டு விளையாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்க தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் அந்த வீர விளையாட்டில் பங்கு பெற்று வருகின்றனர். நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு 2017 முதல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று பிரச்சினை
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி என்பது மாடு பிடிப்பவர்கள் நேரடியாக கலந்து கொள்வது மட்டுமல்லாமல் பொதுமக்களும் பங்கேற்கும் நிகழ்ச்சி ஆகும். ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உடன் தற்போது covid-19 பெரும் தொற்று காரணமாக எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளிக்கிறது.

300 பேருக்கு அனுமதி
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப் படுகிறது. எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுக்கிறது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திறந்தவெளியில் அளவுக்கு ஏற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சம் 50 சதவீத அளவுக்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதி கொடுக்கப்படுகிறது.

கொரோனா நெகட்டிவ்
பார்வையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை கூடத்தில் covid-19 தொற்று இல்லை என சான்று பெற்று இருக்க வேண்டும். மேலும், நிகழ்ச்சியில் பார்வையாளராக பங்கேற்ற அனைவரும் முகக் கவசம் அணிவது தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும். இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications