தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60-ஆக அதிகரிப்பு.. 2 வருடங்களில் இரண்டாவது அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.
9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி ஆல் பாஸ் செய்யப்படுவதாக வெளியிட்டது ஒரு அதிரடி அறிவிப்பு என்றால், அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியது மற்றொரு முக்கிய அறிவிப்பாகும்.

மேஜையை தட்டி வரவேற்பு
இரு அறிவிப்புகளையும் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டபோது, அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் மேஜையை தட்டி வரவேற்பு அளித்தனர். அரசு ஊழியர் ஓய்வு வயது உயர்த்தப்பட்டது குறித்து முதல்வர் என்ன கூறினார். இதோ அவரது வார்த்தைகளில் இருந்து நீங்களே பாருங்கள்.

கடந்த வருடம் உயர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம், எனது உத்தரவின் பேரில் அரசாணை வெளியிடப்பட்டது. அரசு பணியாளர் ஓய்வு பெறும் வயது தற்போது அமலில் உள்ள 59 என்பது 60 வயது ஆக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் சட்டசபையில் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுத்துறை
இந்த உத்தரவு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள் உள்ளாட்சி அமைப்புகள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை பணியாளர்களுக்கும் பொருந்தும்.

ஓய்வு பெறும் பணியாளர்கள்
இந்த உத்தரவு, தற்போது அரசு பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் இந்த ஆண்டு, அதாவது 31.5.2021 அன்று பணியிலிருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார்.

மகிழ்ச்சி
அரசு ஊழியர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்திதான். அதேநேரம், வேலை தேடும் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் சுணக்கம் ஏற்படும் என்பது இதில் உள்ள நெகட்டிவ் விஷயமாகும். ஏனெனில் 2 வருடங்களில் 2 முறை அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டுள்ளது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications