தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60-ஆக அதிகரிப்பு.. 2 வருடங்களில் இரண்டாவது அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.
9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி ஆல் பாஸ் செய்யப்படுவதாக வெளியிட்டது ஒரு அதிரடி அறிவிப்பு என்றால், அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியது மற்றொரு முக்கிய அறிவிப்பாகும்.

மேஜையை தட்டி வரவேற்பு
இரு அறிவிப்புகளையும் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டபோது, அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் மேஜையை தட்டி வரவேற்பு அளித்தனர். அரசு ஊழியர் ஓய்வு வயது உயர்த்தப்பட்டது குறித்து முதல்வர் என்ன கூறினார். இதோ அவரது வார்த்தைகளில் இருந்து நீங்களே பாருங்கள்.

கடந்த வருடம் உயர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம், எனது உத்தரவின் பேரில் அரசாணை வெளியிடப்பட்டது. அரசு பணியாளர் ஓய்வு பெறும் வயது தற்போது அமலில் உள்ள 59 என்பது 60 வயது ஆக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் சட்டசபையில் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுத்துறை
இந்த உத்தரவு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள் உள்ளாட்சி அமைப்புகள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை பணியாளர்களுக்கும் பொருந்தும்.

ஓய்வு பெறும் பணியாளர்கள்
இந்த உத்தரவு, தற்போது அரசு பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் இந்த ஆண்டு, அதாவது 31.5.2021 அன்று பணியிலிருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார்.

மகிழ்ச்சி
அரசு ஊழியர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்திதான். அதேநேரம், வேலை தேடும் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் சுணக்கம் ஏற்படும் என்பது இதில் உள்ள நெகட்டிவ் விஷயமாகும். ஏனெனில் 2 வருடங்களில் 2 முறை அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications