தமிழ்நாடு என்பது வெறும் வார்த்தையல்ல.. ரத்தமும் சதையும் கொண்ட போராட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: திமுக ஆட்சியில் அமர்ந்ததால் மட்டுமே தமிழ்நாடு என்று பெயர் சூட்ட முடிந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் 'தமிழ்நாடு நாள்' விழா நடைபெற்று வருகிறது. இந்த 'தமிழ்நாடு நாள்' விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்றுள்ளார்.கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஓய்வில் இருப்பதால் காணொலி வாயிலாக பங்கேற்றார்.

இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் அமர்ந்ததால் தான் தமிழ்நாடு என பெயர் சூட்ட முடிந்தது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தது திமுகவின் சாதனை. கி.மு.6ம் நூற்றாண்டிலேயே நகரமயமாக இருந்தது என்பதற்கு கீழடியே ஆதாரம். தமிழினம் உலகம் முழுவதும் பரவி இருக்கும் இனம். தாழ்ந்து கிடந்த தமிழகத்தை தலைநிமிரச் செய்த நாள் ஜூலை 18 என்று தெரிவித்தார்.
Recommended Video
தொடர்ந்து தமிழுக்காக உயிர் நீத்தவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்தார். தமிழ்நாடு என்பது என்பது வெறும் வார்த்தையல்ல, இரத்தமும் சதையும் கொண்ட உரிமை போராட்டம். திமுக ஆட்சியில் தெற்கு சிறக்கிறது என்ற பெருமையை தேடி தந்துள்ளோம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications